tamilnadu

img

சாக்கடை நீரால் தொற்று நோய் பரவும்

சீரமைக்கக் கோரி மனு

அவிநாசி மே 29- அவிநாசி அருகே வேலாயுதம்பாளையம் ஏரி காலனி பகுதியில் தேங்கியுள்ள சாக்கடை நீரால் நோய் தொற்று அபாயம் ஏற்பட்டுள்ளதால், அதனை சீரமைக்க பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்பூர் மாவட்டம், அவிநாசி ஒன்றியத்திற்குட்பட்ட வேலாயுதம்பாளையம் ஊராட்சி ஏடி காலனி பகுதியில் சுமார் 30க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்நிலையில்  அப்பகுதியில் சாக்கடை கழிவு நீர் தேங்கியுள்ளதால் அப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. இதேபோல் நோய்த்தொற்று ஏற்படுமோ என அப்பகுதி மக்கள் அச்சத்திற்குள்ளாகி உள்ளனர். எனவே உடனடியாக சாக்கடை நீரை அப்புறப்படுத்த வேண்டுமென ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் அலுவலகத்தில் அப்பகுதி மக்கள் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.