இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் கோவை இருகூர் கிளையின் சார்பில் இயற்கையை பாதுகாப்போம் என்கிற முழக்கத்துடன் 11 ஆம் ஆண்டு கைப்பந்து போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் முதல் பரிசு பெற்ற பல்லடம் ப்ரண்ட்ஸ் அணி, இரண்டாவது பரிசு பெற்ற சக்தி கல்லூரி அணி, மூன்றாம் பரிசு பெற்ற இருகூர் வாலிபர் சங்க அணிகளுக்கு சுதந்திர தினத்தன்று பரிசுகோப்பை மற்றும் ரொக்கம் வழங்கப்பட்டது. இதில் சத்துணவு ஊழியர் சங்கத்தின் முன்னாள் மாநில தலைவர் பழனிச்சாமி, வாலிபர் சங்க மாவட்ட தலைவர் ஸ்டாலின்குமார், ஓ.ராஜா, தீனதயாளன், பிரேம்குமார் மற்றும் விஜயராகவன், சண்முகசுந்தரம் உள்ளிட்டோர் வீரர்களை வாழ்த்தி பரிசளித்து கௌரவித்தனர்.