tamilnadu

img

கடும் வறட்சியினால் மான்களின் பலி எண்ணிக்கை அதிகரிப்பு

அவிநாசி, மே 17–அவிநாசி அருகே நிலவும் கடும்வறட்சியினால் மான்கள் தொடர்ந்துபலியாகி வருவது சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.அவிநாசி அருகே, சாமந்தன்கோட்டை, சங்கமாங்குளம், பச்சம்பாளையம், நல்லாறு ஓடை, புதுப்பாளையம் உள்ளிட்ட இடங்களில்மான்கள் அதிகளவில் வசித்து வருகின்றன. தற்போது கோடை வெயில்சுட்டெரிக்கும் நிலையில், பல இடங்களில் தண்ணீருக்கு கடும் தட்டுப்பாடுஏற்பட்டுள்ளது. இதனால், சமூக காடுகள் எனப்படும் வனத்தை ஒட்டிய பகுதி, விவசாய நிலம், குடியிருப்புப் பகுதிக்கு உணவு தேடி வரும் மான்கள், வாகனங்களில் அடிபட்டோ, நாய்களால் துரத்தப்பட்டோ பலியாகும் சம்பவங்கள் அதிகரித்துவருகின்றன. இந்நிலையில், அவிநாசி பச்சம்பாளையம் ரோட்டில், ஒரு மான் இறந்து கிடந்தது. ‘நாய்கள் விரட்டி கடித்ததில், மான் இறந்துள்ளது’ என வனத்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அவிநாசி கால்நடை மருத்துவமனை டாக்டர் கூறியதாவது; மான்கள் வசிக்கும் வனம் மற்றும் அது சார்ந்த பகுதிகளில் கோடை வறட்சியால் உணவு, தண்ணீருக்கு தட்டுப்பாடு ஏற்படும்போது, மான்கள், விவசாய நிலம் மற்றும் குடியிருப்புப் பகுதிக்கு வருகின்றன. குடியிருப்பு பகுதிகளில் சுற்றித்திரியும் தெரு நாய்கள் கூட்டமாக சேர்ந்து மான்களை விரட்டும் போது, பயத்தில் மான்களுக்கு மாரடைப்பு ஏற்பட்டு அவை பலியாகின்றன. நாய்கள் கடித்துதான் மான்கள் இறக்க வேண்டும் என்பதில்லை. மிகவும் மென்மையான தன்மை கொண்ட மான்கள், நாய்களின் விரட்டலிலேயே இறந்து போகும் வாய்ப்புள்ளது. ஆகவே மான்கள், குடியிருப்பு பகுதியில் நுழைவதை தடுக்க, வனத்துறை சார்பில் அவற்றின் வாழ்விடங்களில் தொட்டி வைத்து அவ்வப்போது நீர் நிரப்பப்பட வேண்டும். மேலும், பொதுமக்களும் விழிப்புணர்வுடன் இருந்து, மான்கள் பாதிக்கப்படாமல் இருக்க உதவ வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.இருப்பினும், மான்கள் இறப்புக்கான அனைத்து வகையான காரணங்களையும் விரிவாக அலசி, ஆராய்ந்து அதை தடுக்க வனத்துறையினர் உரியநடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.