நாமக்கல், அக்.11- நாமக்கல்லில் உள்ள கிரீன் பார்க் பள்ளியில் வெள்ளியன்று வருமானவரித் துறையினர் சோதனையில் ஈடுப்பட்டனர். நாமக்கல் அருகே உள்ள போது பட்டியில் கிரீன் பார்க் என்ற தனியார் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் பத்தாம் வகுப்பு பயிற்சி கட்டணம், நீட் பயிற்சி கட்டணமாக பல லட்சம் பெற்றதாக கூறப்பட்ட புகாரை அடுத்து வருமானவரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின் றனர். இப்பள்ளியில் சேலம், மதுரை, திருச்சி, ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த இரண்டாயி ரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். கடந்த சில வருடங்களாகவே தமிழகத்தில் மதிப்பெண் அடிப்படையில் இக்கல்வி நிறுவனம் தொடர்ந்து இரண்டு, மூன்றாம் இடத்தை பிடித்து வருகின்றது. இதனால் தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான மாணவர்கள் இப்பள்ளியில் சேர்ந்து வந்தனர். இந்நிலையில் இப்பள்ளியில் படித்து வரும் மாணவர்களிடம் பள்ளிக் கட்டணம், பயிற்சி கட்டணம், நீட் தேர்வு பயிற்சி கட்டணம் உள் ளிட்டவைகள் லட்சக்கணக்கில் பெறுவ தாக வருமான துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து வெள்ளியன்று பள்ளி வளாகத்திற்குள் 20க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் மற்றும் 50க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பள்ளி வளாகத்தில் காலை 10 மணி முதல் சோதனை மேற் கொண்டனர். பள்ளியின் நிர்வாகிகள் சரவணன், குருவாயூரப்பன் உள்ளிட்ட வர்களிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் நாமக்கல் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.