tamilnadu

img

கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் திட்டப்பணிகளை விரைவுபடுத்த அதிகாரிகளுக்கு உத்தரவு

 கோவை, அக்.12- கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் நடைபெறும் திட்டப்பணிகளை விரைவுபடுத்த அதி காரிகளுக்கு மாநகராட்சி ஆணையாளர்‌ உத்தர விட்டுள்ளார். கோவை மாநகராட்சி பிரதான அலுவலகக்‌ கூட்டரங்கில்‌ மாநகராட்சியில்‌ நடைபெற்று வரும்‌ வளர்ச்சி‌ பணிகள்‌ குறித்து மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ஷ்ரவன்குமார்‌ ஜடாவத்‌ தலைமையில்‌ அலுவலர்கள்‌, பொறியாளாகளுடன்‌ ஆய்வுக்‌ கூட்டம்‌ நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாநகராட்சி துணை ஆணையாளர்‌ ச.பிரசன்னா ராமசாமி முன்னிலை வகித்தார். மாநகராட்சியின்‌ 100  வார்டுகளிலும்‌ நடைபெற்று வருகின்ற வளர்ச்சிப்‌ பணிகளின்‌ முன்னேற்றம்‌ குறித்து மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ‌கலந்தாய்வு மேற்கொண்டார். இதைத்தொடர்ந்து சாலைப்பணிகள்‌, பாதாள சாக்கடை திட்டப்பணிகள்‌, குடிநீர்‌ வசதியினை சீராக்கிடவும்‌ மேம்படுத்தவும்‌ மேற்கொள்ளப்பட்டு வரும்‌ பணிகள்‌, மின்விளக்கு வசதிகள்‌, நுண்ணுயிர்‌ உரம்‌ தயாரிக்கும்‌ மையங்களின்‌ செயல்பாடுகள்‌ மற்றும்‌ ஆழ்குழாய்‌ கிணறுகளின்‌ செயல்பாடுகள்‌ ஆகிய பணிகள்‌ குறித்தும்‌ வளர்ச்சிப்‌ பணிகள்‌ குறித்தும்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ஷரவன்குமார்‌ ஜடாவத்‌ ஆய்வு மேற் கொண்டனர். இதன்பின், பணிகளை துரிதமாகவும்‌, தரமாகவும்‌ விரைந்து முடிக்குமாறு சம்மந்தப்பட்ட அலுவலர்கள்‌, பொறியாளர்களுக்கு உத்தரவிட்டார்.