tamilnadu

கேரளத்தில் தனியார் பேருந்துகளுக்கு வரி விலக்கு

திருவனந்தபுரம், ஆக.29- கேரளத்தில் பள்ளிகள், தனி யார் பேருந்துகளுக்கான 6 மாத வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை போக்குவரத்து அமைச் சர் ஏ.கே.சசீந்திரன் செய்தியாளர்களி டம் தெரிவித்தார்.  ஒதுக்கப்பட்ட அனைத்து வழித்தடங்களிலும் பேருந்துகளை இயக்குவதன் மூலம் பேருந்து உரிமையாளர்கள் அர சாங்கத்துடன் ஒத்துழைக்க வேண்டும் என்றும் அவர் கோரினார். இத்தனை உதவிகளையும் மீறி பேருந்துகளை இயக்க தயாராக வில்லை என்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் எச்சரித்தார்.    சுற்றுலா பேருந்துகளுக்கும் வரி விலக்கு அளிக்கப்படுகிறது. இந்த முடிவால் அரசாங்கம் பெரும் நிதிச் சுமையை எதிர்கொள்ளும். ரூ.44 கோடி வருவாய் இழப்பு அரசுக்கு ஏற்படும் எனவும் அவர் கூறினார்.  வரி விலக்கு ஏப்ரல் முதல் மூன்று மாதங்கள்,ஜூலை முதல் மூன்று மாதங்கள் வரை என இரண்டு  காலாண்டுகளுக்கு வழங்கப்படு கிறது.