tamilnadu

img

அன்னூரில் மாற்றுக் கட்சியில் இருந்து விலகியவர்கள் மார்க்சிஸ்ட் கட்சியில் இணைந்தனர்

அன்னூர், அக்.17- அன்னூர் ஒன்றியத்தில் மாற்றுக் கட்சி யில் இருந்து விலகிய 30க்கும் மேற்பட் டோர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர். கோவை மாவட்டம், அன்னூர் ஒன்றி யத்தில் பல்வேறு கட்சிகளில் இணைந்து பணியாற்றி வந்த 30க்கும் மேற்பட்டோர் வெள்ளியன்று மார்க்சிஸ்ட் கட்சியில் தங் களை இணைத்துக் கொண்டனர். மார்க் சிஸ்ட் கட்சியின் அன்னூர் ஒன்றிய அலுவ லகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் கட்சி யின் ஒன்றிய செயலாளர் முகம்மது முசீர், ஒன்றிய கமிட்டி உறுப்பினர்கள் சத்திய ராஜ், அகமது கபீர், சுகுமார், சரவணன், அர் ஜூன் மற்றும் அன்வர், இஸ்மத் பாஷா, நட ராஜ்,  வஹீதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.