tamilnadu

ஏற்காடு மற்றும் தருமபுரி முக்கிய செய்திகள்

போலி ஆவணங்களை கொடுத்து மோசடி 10 பேருக்கு சிறை

கோவை, நவ.28–  வங்கியில் போலி ஆவ ணங்களை கொடுத்து கடன் பெற்று மோசடி செய்த திருப் பூரைச் சேர்ந்த தொழிலதி பர், கனரா வங்கி மேலாளர் உள்ளிட்ட 10 பேருக்கு இரண்டாண்டுகள் சிறை தண்டனை விதித்து கோவை சிபிஐ நீதிமன் றம் வியாழனன்று தீர்ப்ப ளித்தது.  திருப்பூரில்  பனியன் தொழில் நடத்தி வருபவர் பாண்டியராஜ். மதுரை  மாவட்டம் அய்யம்பாளை யத்தை சேர்ந்த இவர் தன்னு டைய மனைவி அனித்ரா மற்றும் வங்கி மேலாளர் சங்கரகுமார், கருப்பையா, நாகேந்திரன் உள்ளிட்ட 10 பேர்,கடந்த 2005 ஆம்  ஆண்டு  கனரா வங்கியில் போலியான ஆவணங் களை கொடுத்து 5 கோடி ரூபாய் கடன் பெற்று மோசடி செய்துள்ளனர். இது குறித்த புகாரின் பேரில் சிபிஐ வழக்குப்ப திவு செய்து கோவை நீதி மன்றத்தில் குற்றப்பத்தி ரிகை தாக்கல் செய்தனர். கடந்த 12 வருடங்களாக இந்த வழக்கு விசாரணை யில் இருந்து வந்த நிலை யில், தற்போது விசாரணை முடிந்து கோவை சிபிஐ நீதி மன்ற நீதிபதி நாகராஜ் குற்றவாளிகளான தொழி லதிபர் பாண்டியராஜ் உட்பட 10 பேருக்கு இரண்டு வருடம் சிறை  தண்டனையும், 70 ஆயி ரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

சத்தியமங்கலம் வன பகுதியில் பரலாக மழை 

ஈரோடு,நவ 28- சத்தியமங்கலம் வன பகுதியில் 3 மணி நேரம்  சாரல் மழை பெய்தது. ஈரோடு மாவட்டம் முழுவதும் வியாழனன்று காலை மழை மேகக்கூட் டங்கள் சூழ்ந்திருந்தது. அதிகாலை 5 மணி முதல் 8 மணி வரை சத்தியமங்கலம் புளியங்கோம்பை, ஒட்ட  குட்டை, சிக்கரசம்பாளை யம், வடவள்ளி, ராஜன்நகர், பண்ணாரி மற்றும் சுற்று வட்டாரப்பகுதிகளில் 3 மணி நேரம் சாரல் மழை பெய்தது.  இதேபோல் சத்தியமங்கலம் வனப்பகு திகளான திம்பம், தலமலை, ஆசனூர், மாவநத்தம், அரேப்பாளையம், தாள வாடி, புலியாடா, தொட்ட காஜனூர் ஆகிய பகுதிகளி லும் அன்று காலை 6மணி  முதல் 8 மணி வரை சாரல்  மழை பெய்தது. இந்த சாரல் மழையுடன் பனிப்பொழி வும் காணப்பட்டது. இத னால் திம்பம்-ஆசனூர்  மலைப்பாதையில் தமிழக- கர்நாடகா சாலையில் வாக னங்கள் முகப்பு விளக்கு களை போட்டப்படி சென் றன.சாலை முழுவதும் வெண்புகை போல் பனி படர்ந்திருந்தது.