மே 21ல் பள்ளி வாகனங்கள் ஆய்வு
கோவை, மே 14-கோவை மாவட்டத்திலுள்ள பள்ளி பேருந்துகள் மே 21ம் தேதி ஆய்வு செய்யப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.தமிழ்நாடு மோட்டார் வாகன சிறப்பு விதிகள்-2012ன் படி பள்ளி பேருந்துகளின் வரன்முறை மற்றும் கட்டுப்பாடு உள்ளனவா என கோவை மாவட்டத்தில் மே 21 ஆம் தேதியன்று ஆய்வு நடைபெற உள்ளன. கோவை மாவட்டத்தில் கோவை மையம்,தெற்கு, வடக்கு, மேற்கு, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் ஆகிய மையங்களில் வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் உள்ளன. சூலூர் மற்றும் வால்பாறையில் பகுதி அலுவலகங்களும் இயங்கி வருகின்றன. இவற்றின் எல்லைக்குட்பட்டு 340 பள்ளிகளில் 2015 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதில் கோவை மாநகரத்தில் மட்டும் 1172பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இவை மாவட்டஅளவிலான கூட்டாய்வு குழு உறுப்பினர்கள் முன்னிலையில் ஆய்வு செய்யப்பட உள்ளன. எனவேகல்வி நிறுவன வாகனங்களை உரிய ஆவணங்களுடன் ஆய்வுக்கு ஆஜர்படுத்தி சான்று பெறுமாறுமாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி விடுத்துள்ளஅறிக்கையில் தெரிவித்துள்ளார்.
முதல் நிலை விளையாட்டு விடுதியில் மாணவர் சேர்க்கை
உதகை, மே 14-தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலமாக முதல் நிலை விளையாட்டு விடுதிகளில் பள்ளி மாணவ, மாணவிகள் சேர்க்கப்பட உள்ளனர். சிறுவர்களுக்கான முதல் நிலை விளையாட்டுவிடுதி சென்னை, திருச்சி மற்றும் திருநெல்வேலியில் செயல்பட்டு வருகிறது. சிறுமியர்களுக்கு சென்னை மற்றும் ஈரோடு ஆகிய இடங்களில் முதல் நிலை விடுதிகள் செயல்படுகின்றன. இதில் சேர விரும்பும் 6,7 மற்றும் 8ம் வகுப்பு மாணவ, மாணவிகள்றறற.ளனயவ.வn.படிஎ.in என்ற இணைய தளத்தில்மே 20 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.விண்ணப்பித்தவர்களுக்கு மே 21 அன்று காலை 8 மணிக்கு சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கில் மாநில அளவிலான தேர்வு நடைபெற உள்ளது. இங்கு சிறுவர்களுக்கு தடகளம், இறகுப் பந்து, குத்துச் சண்டை, ஜிம்னாஸ்டிக்ஸ், டென்னில் மற்றும் நீச்சல் ஆகிய விளையாட்டுகளும், சிறுமியர்களுக்கு தடகளம், இறகுப் பந்து, மேசைப்பந்து மற்றும் ஜிம்னாஸ்டிக்ஸ் ஆகிய விளையாட்டுகளும் நடைபெறும். இதில் வெற்றி பெறுவோர்க்கு சேர்க்கையில் முன்னுரிமை வழங்கப்படும். மேலும்விபரங்களுக்கு மேற்கண்ட இணைய தள முகவரியில் பார்க்கவும். இவ்வாறு நீலகிரி மாவட்ட ஆட்சியர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
ஆனைகட்டி அரசு ஐடிஐயில் மாணவர் சேர்க்கை
கோவை, மே 14-ஆனைகட்டி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சியாளர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.கோவை மேட்டுப்பாளையம் சாலையில் அமைந்துள்ள அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் ஆனைகட்டி தொழிற்பயிற்சி நிலையம் தற்காலிகமாக செயல்பட்டு வருகிறது. பழங்குடியினருக்கான இத்தொழிற் பயிற்சி மையத்தில் 2019ம் கல்வி ஆண்டிற்கான பயிற்சியாளர்கள் சேர்க்கைக்கு கடந்த 3ம் தேதி முதல் ஆன்லைன் விண்ணப்பங்கள் பதிவேற்றம் நடைபெற்று வருகிறது. மேலும் றறற.ளமடைடவசயiniபே.வn.படிஎ.in என்ற இணைய தள முகவரியில் மே 31ஆம் தேதிவரை விண்ணப்பங்கள் பதிவேற்றம் நடைபெறும்.இணைய தளம் மூலம் விண்ணப்பிக்க இயலாதவர்கள் உரிய ஆவணங்களுடன் தொழிற்பயிற்சி நிலையத்திற்கு நேரில் சென்று விண்ணப்பிக்கலாம்.தொழிற்பயிற்சி நிலையத்தில் பிட்டர், எலக்ட்ரீசியன், எம்எம்வி, வயர்மேன் மற்றும் வெல்டர் ஆகிய பாடப்பிரிவுகளில் இருபாலரும் சேரலாம். கல்வித் தகுதி 8 மற்றும் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது 14மதல் 40 வரை இருக்காலம். மகளிருக்கு வயது வரம்பில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. பாடப்புத்தகம் மற்றும் பயிற்சி கட்டணம் இலவசம். இலவச பேருந்து பயண அட்டை வழங்கப்படும். வருகையின் அடிப்படையில் பிரதிமாதம் கல்வி உதவித் தொகையாக ரூ.500 வழங்கப்படும். மேலும், இலவச சீருடைகள், காலணிகள் மற்றும் வரைபடக் கருவிகள் வழங்கப்படும். தகுதியின் அடிப்படையில் இலவச மிதிவண்டி மற்றும் மடிக்கணிகள் வழங்கப்படும். தொழிற்பயிற்சி நிலையத்தில் நடக்கும் கேம்பஸ் இன்டர்வியூ மூலம் வேலை வாய்ப்பு பெற்றுக் கொடுக்கப்படும். மேலும் விபரங்களுக்கு 99427 30555, 98946 95803 மற்றும் 88381 60498 எண்களில் தொடர்பு கொள்ளலாம் என ஆனைகட்டி தொழிற் பயிற்சி நிலைய முதல்வர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.