மகுடஞ்சாவடியில் வேலைவாய்ப்பு முகாம்
இளம்பிள்ளை, பிப்.15- மகுடஞ்சாவடியில் மாவட்ட அளவி லான வேலைவாய்ப்பு முகாம் சனியன்று நடைபெற்றது. சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடியில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக் கத்தின் சார்பில் சேலம் மாவட்ட அளவி லான வேலைவாய்ப்பு முகாம் நடை பெற்றது. இம்முகாமில் தனியார் வங்கிகள், கல்லூரிகள், மோட்டார் வாகன கம்பெனி கள், எல்ஐசி நிறுவனம் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட பல்வேறு நிறுவனங்கள் கலந்து கொண்டன. இம்முகாமினை மகுடஞ்சாவடி ஒன்றிய குழுத்தலைவர் லலிதா குத்து விளக்கு ஏற்றி துவக்கிவைத்தார். சங்ககிரி சட்டமன்ற உறுப்பினர் ராஜா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இதில் சேலம் மாவட்ட மகளிர் திட்ட இயக்குனர் செல்வக்குமார், உதவித்திட்ட அலுவலர் சுந்தர் ஆகியோர் வேலை வாய்ப்புக்கான பணி ஆணைகளை வழங்கி னர். இம்முகாமில் மகுடஞ்சாவடி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வெங்கடேசன், செல்வராஜ், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் தேன்மொழி,கூட்டுறவு சங்கத் தலைவர் நாகராஜ், உதவி திட்ட அலுவலர் விஜயகுமார் வட்டார வள மைய அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இம்முகாமில் மாற்றுத் திறனாளிகள் உள்பட்ட 1500-க்கும் மேற் பட்டோர் கலந்து கொண்டு விண்ணப் பித்தனர். இதில் 8 மாற்றுத்திறனாளிகள் உள்பட 600-க்கும் மேற்பட்டோருக்கு பணி ஆணை வழங்கப்பட்டது.
மின் இணைப்பு பெற லஞ்சம்: அதிகாரிகள் சிறையில் அடைப்பு
தருமபுரி, பிப்.15- மின்இணைப்புக்கு லஞ்சம் வாங்கிய உதவி பொறி யாளர் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். தருமபுரி மாவட்டம், இண்டூர் அருகே தளவாயஅள்ளி ஊராட்சி நடப்பனஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி மாது (35). இவரின் விவசாய நிலத்தில் சாமந்தி உள்ளிட்ட பூக்களை சாகுபடி செய்துள்ளார். இந்நிலையில் பூந்தோட் டத்திற்கு தண்ணீர் இறைப்பதற்காக, பூந்தோட்டத்தில் மின் இணைப்பு பெறுவதற்காக இண்டூர் மின்வாரிய உதவி பொறியாளர் அலுவலகத்தில் கடந்த 6 மாதத்திற்கு முன்பு விண்ணப்பித்திருந்தார். மின் இணைப்புக்காக இண்டூர் மின்வாரிய உதவி பொறியாளர் அகல்யா மற்றும் வணிக ஆய்வாளர் முனுசாமி ஆகியோரை விவசாயி மாது அணுகிய போது, புதிய மின்இணைப்பு வழங்க ரூ.11ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளனர். இதையடுத்து மாது முதற்கட்டமாக ரூ.4 ஆயிரத்தை கொடுத்துள்ளார். இதையடுத்து மாது மின் வாரிய அதிகாரிகள் லஞ்சம் கேட்டது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் செய்தார். இதையடுத்து போலீசாரின் ஆலோசனை படி, வெள்ளி யன்று விவசாயி மாது இண்டூர் மின்வாரிய அலுவல கத்திற்கு சென்று உதவி பொறியாளர் அகல்யா மற்றும் முனுசாமியிடம் ரசாயணம் தடவிய ரூ.7 ஆயிரத்தை கொடுத் தார். பணத்தை அகல்யா மற்றும் முனுசாமி ஆகிய இரு வரும் வாங்கிய போது, அங்கு மறைந்திருந்த போலீசார் இருவரையும் கைது செய்தனர். மேலும், தளவாய்அள்ளியை சேர்ந்த மருது என்ற விவசாயி, பூந்தோட்ட மின்இணைப்புக்காக ரூ.20 ஆயிரத்தை காலை 10 மணியளவில் உதவி பொறியாள ரிடம் கொடுத்திருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து சனியன்று அகல்யா, முனுசாமி ஆகியோர் தருமபுரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். பின்னர் அகல்யா கிருஷ்ணகிரி பெண்கள் சிறையிலும், முனுசாமி தருமபுரி சிறையிலும் அடைக்கப்பட்டனர்.
தடியடி நடத்தியதை கண்டித்து இஸ்லாமியர்கள் முற்றுகை
சேலம், பிப்.15- குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி சென்னை யில் போராட்டத்தில் ஈடுபட்டவர் கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்திய சம்பவத்தை கண்டித்து, சேலம் மாநகர காவல் உதவி ஆணை யாளர் அலுவலகத்தை முற்றுகை யிட்டு இஸ்லாமியர்கள் போராட் டத்தில் ஈடுபட்டனர். சென்னை வண்ணாரபேட்டை யில் குடியுரிமை திருத்த சட்டத் திற்கு எதிராக போராட்டத்தில் ஈடு பட்டவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியதோடு, பெண்கள் மற்றும் குழந்தைகள் என அனை வரையும் கைது செய்தனர். இதை கண்டித்து பல்வேறு பகுதிகளில் இஸ்லாமியர்கள் சாலை மறியல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங் களில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக சேலம் தலைமை தபால் அலுவலகம் அருகே உள்ள காவல் உதவி ஆணையாளர் அலுவலகத்தை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சேலம் மாவட்ட தலைவர் அம்ஜத் தலைமையில் 500க்கும் மேற் பட்டோர் முற்றுகையிட்டு போராட் டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட் டத்திற்கு ஆதரவு தெரிவித்து தமுமுக, எஸ்டிபிஐ, பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா உள்ளிட்ட பல்வேறு இஸ்லாமிய அமைப்பி னரும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். இதில் சென்னையில் தடி யடி நடத்திய காவல்துறையி னரை கண்டித்தும், தடியடி நடத்தி யவர்கள் மீது துறை ரீதியாக நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் முழக்கங்களை எழுப்பினர். இதில் பெண்கள் குழந்தைகள் என அனைத்து தரப்பினரும் கைகளில் தேசியக் கொடியை ஏந்தியும், சுதந்திர இந் தியாவில் இஸ்லாமியர்களின் பங்களிப்பு குறித்த பதாகைகளை ஏந்தியும் கண்டன முழக்கங் களை எழுப்பினர்.