உடுமலை, ஜூன் 9- பரம்பிக்குளம் ஆழியாறு (பிஏபி) பாசனத் திட்டத்தில் விவசாயி களுக்குத் தேவையான தண்ணீர் கிடைப்பதை உத்தரவாதப்படுத்த ஆனைமலை நல்லாறு அணைத் திட்டத்தை உடனடியாக நிறை வேற்ற வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் குடி மங்கலம் ஒன்றியத்தில் பிரச்சார பயணம் மேற்கொள்ளப்பட்டது. திருப்பூர் மாவட்டத்தில் தமிழ் நாடு விவசாய சங்கத்தின் மாவட்டச் செயலாளராக செயல்பட்ட காலஞ் சென்ற குரல்குட்டை எம்.தங்க வேலின் நினைவு நாளான ஜூன் 9 ஞாயிற்றுக்கிழமை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சியின் குடிமங்கலம் ஒன்றியக்குழு சார்பில் இந்த பிரச் சாரப் பயணம் நடைபெற்றது. பிஏபி பாசனத் திட்டத்தில் 4 லட்சம் ஏக்கருக்கு மேல் நீர்ப் பாசனம் பெறும் நிலையில் தற் போது திருமூர்த்தி அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப் படுகிறது. நீர்ப்பிடிப்புப் பகுதி களில் உள்ள பிஏபி அணைகளில் இருந்து ஆழியாறு அணை, காண்டூர் கால்வாய் வழியாக திருமூர்த்தி அணைக்குத் தண்ணீர் வந்து சேர் வதற்கு காலதாமதம் ஆவதுடன் வழியில் ஏராளமான தண்ணீர் விர யமாகிறது. ஆனைமலையாறு – நல்லாறு அணைத் திட்டத்தை நிறை வேற்றினால் இந்த காலவிரயத் தையும், தண்ணீர் விரயத்தையும் தடுப்பதுடன்,கூடுதல் தண்ணீர் விரைவாக திருமூர்த்தி அணைக்கு வந்து சேரும். அதைக் கொண்டு விவசாயிகளுக்குத் தேவையான தண்ணீரை குறுகிய கால இடை வெளியில் வழங்க முடியும். பிஏபி பாசனப் பரப்பைச் சேர்ந்த திருப்பூர், கோவை மாவட்ட விவசாயிகளின் நீண்ட காலக் கோரிக்கையாக இருந்தாலும் இத்திட்டத்தை செயல்படுத்த அரசு நிர்வாகம் நடவ டிக்கை எடுக்காமல் உள்ளது. எனவே உடனடியாக ஆனைமலை யாறு-நல்லாறு அணைத் திட்டத்தை நிறைவேற்றி விவசாயிகளுக்கு தண்ணீர் கிடைப்பதை உத்தர வாதப்படுத்த வேண்டும் என்று இந்த இயக்கம் நடத்தப்பட்டது. இப்பிரச்சாரப் பயணம் குடி மங்கலம் ஒன்றியப் பகுதி முழுவதும் உள்ள கிராமங்கள்தோறும் நடை பெற்றது. இப்பிரச்சார பயணத்தில் ஊரக வேலைத் திட்டத்தை முறை யாக அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட மக்கள் நலன் சார்ந்த பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பிரச்சாரம் செய்யப் பட்டது. இப்பயணம் கொங்கல் நகரம் பகுதியில் தொடங்கி இருபதுக்கும் மேற்பட்ட இடங் களில் கொடியேற்று விழாவும் நடைபெற்றது. நிறைவாக வி. வல்லகுண்டாபுரம் பகுதியில்முடி வடைந்தது. இந்த பிரச்சார பயணத் திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியக்குழு உறுப் பினர் ஜெ.ஸ்ரீதர் தலைமை தாங் கினார். மாவட்ட செயலாளர் செ. முத்துக்கண்ணன், மாவட்டசெயற் குழு உறுப்பினர் கே.உண்ணி கிருஷ்ணன், ஒன்றிய செயலாளர் சசிகலா உள்ளிட்டதிரளானோர் கலந்து கொண்டனர்.