tamilnadu

img

ரயில்வே மேம்பால பணிகளை விரைந்து முடித்திடுக

செந்தில்குமார் எம்.பி. மனு

தருமபுரி, அக்.21- ரயில்வே மேம்பால பணிகளை விரைந்து முடிக்க வலியு றுத்தி தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார், தென்மேற்கு ரயில்வே பொது மேலாளர் அஜய்குமாரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்.  அந்த மனுவில் கூறியிருப்பதாவது, தருமபுரி ரயில் நிலை யத்தில் இருந்து சேலம்-பெங்களூரு வழியாக செல்லும் ரயில் களுக்கு 2 நடைமேடைகள் உள்ளன. ஆனால், ரயில்வே  நிர்வாகத்தினர் 2வது நடைமேடையை மட்டுமே பயன்படுத் துகின்றனர். இதனால் குழந்தைகள் மற்றும் வயதானவர் கள், 1வது நடைமேடையைக் கடந்து சென்று ரயிலில் ஏற சிரமப்படுகிறார்கள். நடைமேடை உயரமாக இருப் பதால், ஏறி இறங்கவும் சிரமப்படுகின்றனர். எனவே, 1வது நடைமேடையை நிரந்தரமாக பயணிகள் ஏறவும், இறங்கவும் ரயிலை நிறுத்த வேண்டும்.  மேலும் அதியமான்கோட்டை ரயில்வே மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டு ஓராண்டுக்கும் மேலாகிறது. ஆனால், ரயில்வே நிர்வாகம் இதுவரை அவர்களது பணியினை தொடங்கவில்லை. இப்பணியை விரைவில் முடிக்க வேண் டும். பெங்களூரு- எர்ணாகுளம் ரயில் (எண்.12677) மற்றும் எர்ணாகுளம்- பெங்களூரு (எண். 12678) ஆகிய ரயில்கள், பாலக்கோடு ரயில் நிலையத்தில் நிற்பதில்லை. இந்த ரயிலை பாலக்கோடு ரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும். அதியமான்கோட்டையில், வரலாற்று சிறப்பு மிக்க காலபைரவர் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு கர்நாடகா மற்றும் ஆந்திரா மாநிலங்களிலிருந்து ஏராள மான பக்தர்கள் வருகின்றனர். எனவே, அதியமான் கோட்டையில் ரயில் நிலையம் அமைக்க வேண்டும். தரு மபுரி ரயில் நிலையத்தில் இரண்டாம் நடைமேடைக்கு செல்வதற்கு லிப்ட் வசதி ஏற்படுத்த வேண்டும். கட்டண கழிப்பிடம் 24 மணிநேரமும் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். இரண்டாம் நடைமேடையில் மேலும் ஒரு கழிப்பிடம் அமைக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.