வட்டார வளர்ச்சி அலுவலகம் முற்றுகை
நாமக்கல், அக்.18 - எலச்சிபாளையம் பகுதி உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தி வட்டார வளர்ச்சி அலுவலகத்தை பொதுமக்கள் வெள்ளியன்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். திருச்செங்கோடு வட்டம், எலச்சிபாளையம் ஒன்றியத் திற்குட்பட்ட சின்ன எலச்சி பாளையம் அகரம் கிராமத்தில் உள்ள ஆதிதிராவிடர் தெருவில் சுமார் 150 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்களுக்கு குடிநீர் தேவைக்காக இயேசு கோவில் அருகில் மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டி கடந்த 20 வருடங்களுக்கு முன்பு கட்டப் பட்டன. இந்நிலையில் மேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டி பழு தடைந்ததால் இடித்து விட்டனர். தற்போது புதிய மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டி கட்டுவதற்கு பில்லர் போடுவதற்கு கம்பி வலை அமைக்கப்பட்டுள்ளது. அதே நேரம், இக்கட்டுமான பணிக் கான பொருட்கள் தரமற்றவை யாக இருப்பதாக பொதுமக்கள் எழுப்பிய குற்றச்சாட்டை தொடர்ந்து தற்போது கட்டு மான பணிகள் நிறுத்தி வைக்கப் பட்டுள்ளது. இதைத்தொடர்ந்த, இப்பகுதி மக்களின் குடிநீர் தேவைக்காக வேறு பகுதியில் இருந்து குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இருப்பினும் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது. எனவே மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டுமான பணியை தரமான முறையில் கட்ட வேண்டும் எனவும், குடிநீர் தட்டுப்பாட்டை சரி செய்ய வேண்டும் என இப் பகுதி மக்கள் வெள்ளியன்று ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் கோரிக்கை மனுவை வட்டார வளர்ச்சி அலுவலர் விஜய குமாரிடம் அளித்தனர். கோரிக் கைகளை பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரி உறுதியளித்தார். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.