திருப்பூர், நவ. 12 - திருப்பூர் அம்மன் நகர் பகுதியில் செயல் பட்டு வரும் தனியார் உடற்பயிற்சி நிலை யத்தில் சேர்வதற்கு கட்டணம் கேட்டதால் இந்து முன்னணி குண் டர்கள் ஐந்து பேர், அங்கிருந்த பயிற்சியா ளரை சரமாரியாகத் தாக்கினர். இதில் படு காயம் அடைந்த பயிற் சியாளர் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். திருப்பூர் அம்மன் நகரில் செயல்பட்டு வரும் உடற்பயிற்சி மையத்தில் வெஸ்லி டேனியல் என்பவர் பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார். இந்து முன்னணியைச் சேர்ந்த சந்தோஷ், கார்த்தி, தமிழ், குட்டி விஸ்வா, அருண் என்ற ஐந்து பேர் அங்கு பயிற்சியில் சேர வந்ததாக கூறப்படுகிறது. அவர்களிடம் உடற்பயிற்சி மையத்தில் சேர்வதற்கு கட்டணம் செலுத்த வேண்டும் என்று பயிற்சி யாளர் கூறியிருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த ஐந்து பேரும் சேர்ந்து வெஸ்லி டேனியலை சரமா ரியாகத் தாக்கிவிட்டனர். இதில் காயமடைந்த வெஸ்லி மாவட்ட அரசுத் தலைமை மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வரு கிறார். இந்த சம்பவம் குறித்து திருமுருகன் பூண்டி காவல் துறையினர் விசாரணை மேற்கொண் டுள்ளனர்.