tamilnadu

ஆக்கிரமிப்பை அகற்ற நெடுஞ்சாலைத்துறை எச்சரிக்கை

அவிநாசி, ஜூன் 10- அவிநாசியில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமித்து வைத்துள்ள கடைகளை உடனே அகற்றுமாறு நெடுஞ்சாலைத்துறை எச்சரித்துள்ளது. அவிநாசி ஒன்றியத்தில் உணவுக்கடைகள், மளிகைக் கடைகள் மற்றும் பல்வேறு விதமான கடைகள் ஈரோடு சாலையிலிருந்து கோவை செல்லும் சாலை வரை நெடுஞ் சாலைக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமித்து வைக்கப் பட்டுள்ளன. இந்நிலையில் நெடுஞ்சாலைத்துறையினர் ஆக்கிரமிப்பு செய்துள்ள கடைகளை அகற்ற போவதாக அறிவித்துள்ளது.  இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரி கூறுகை யில், நெடுஞ்சாலைக்கு சொந்தமான இடத்தை ஆக்கிர மிப்பு செய்துள்ளதால் நடந்து செல்வோருக்கும், வாகனங் களை நிறுத்துவதற்கும் பெரும் இடையூறு ஏற்பட்டு வரு கிறது. ஆறு மாதத்திற்கு முன்பே இரண்டு முறை எச்சரிக்கை நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. ஆனால் தற்போது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.  ஆகவே, ஜூன் 13ஆம் தேதிக்குள் ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு அனைத்து கடை உரிமையாளர்களுக்கும் நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது என தெரி வித்தனர்.