tamilnadu

img

உயர்மின் கோபுரப் பணி: வலையபாளையத்தில் விவசாயிகளுடன் வட்டாட்சியர் பேச்சுவார்த்தை

திருப்பூர், ஆக. 6 – பல்லடம் அருகே உயர்மின் கோபு ரம் அமைப்பது தொடர்பாக செவ்வா யன்று விவசாயிகள், ஊர்மக்களுடன் வட்டாட்சியர் கோபாலகிருஷ்ணன் நேரில் பேச்சுவார்த்தை நடத்தினார்.  திருப்பூர் மாவட்டம், பல்லடம் ஒன்றியம் பூமலூர் ஊராட்சி வலைய பாளையம் கிராமத்தில் உயர்மின் கோபுரம் அமைப்பது தொடர்பான இப்பேச்சுவார்த்தையில், பொகளூ ரில் இருந்து அரசூர் வரையிலான மின்னழுத்த கம்பிவடம் குறுகிய தூரம் கொண்டு செல்லப்படுவதால், அதை உயர் மின் கோபுரம் வழியாக அமைக்காமல், புதை வடமாகக் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயி கள் வட்டாட்சியர் கோபாலகிருஷ் ணனிடம் வலியுறுத்தினர். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பல்லடம் ஒன்றியச் செயலாளர் வை.பழனிச் சாமி உள்பட இந்த வட்டார விவசாயி கள், பெண்கள் உள்ளிட்ட பொது மக்கள் இதில் கலந்து கொண்டனர்.