tamilnadu

அதிவேகமாக இயக்கப்படும் ஆட்டோகள் காவல்துறையிடம் புகார்

அவிநாசி, ஜூன் 27- அவிநாசி அடுத்த கருவலூரில் அதிவேகமாக இயக்கும் ஆட்டோ ஓட்டுநர்கள் மீது நடவடிக்கை எடுக்க காவல் துறையினரிடம் ஆட்டோ ஓட்டுநர்கள் வியாழனன்று   புகார் மனு அளித்தனர். கருவலுர் ஊராட்சி பேருந்து நிறுத்தம் அருகில்  சுமார் 20க்கும் மேற்பட்ட பயணிகள் ஆட்டோ இயங்கி  வருகிறது. இது கருவலூர் சுற்றுவட்டார பகுதிகளான உப்பிலிபாளையம், ராமநாதபுரம், கானூர் மற்றும் பல்வேறு பகுதிகளுக்கு செல்கின்றன. மேலே குறிப் பிட்டுள்ள கிராம பகுதிகளுக்கு குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டுமே பேருந்து வசதி உள்ளது. இதனால் பேருந்து இல்லாத நேரங்களில் பயணி ஆட்டோக்களில் பயணிக் கின்றனர். இந்நிலையில் சில ஆட்டோக்கள் அதிவேகமாக செல்கின்றனர். இதனால் பொதுமக்கள் விபத்து நடந்து விடுமோ என அச்சத்தில் உள்ளனர்.  மேலும் வாரச்சந்தையன்று கிராமப்புறங்களுக்கு செல்ல பொது மக்கள் ஆட்டோக்களை மட்டுமே நம்பி  உள்ளனர். அப்போது அதிகமான ஆட்களை ஏற்றிக்கு கொண்டு அதிவேகமாக செல்கிறார்கள்.  இந்த ஆட்டோ  ஓட்டுனர் உரிமம் இன்றி உள்ளனர். இவர்கள் 18 வயதுக்கு  குறைந்த வயதுடையவர்கள். எனவே ஓட்டுநர் உரிமம்  இல்லாதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டு மென அவிநாசி போக்குவரத்து ஆய்வாளரிடம் ஆட்டோ ஓட்டுநர்கள் அளித்த மனுவில் தெரிவித்திருந்தனர்.