tamilnadu

வீரமிக்க சூலூர் விமானப் படைதளம் தீ வைப்பு போராட்டம்

இந்திய விடுதலைப் போராட்ட அறிவிப்பான வெள்ளை யனே வெளியேறுப் போராட்டம் கோவை மண்ணில் விடு தலை வீரர்களை ஆவேசமிக்க போராட் டங்களுக்கு உந்தித் தள்ளியது. அதில் சூலூர் விமானப்படை தளத்திற்கு தீ  வைத்த போராட்டம் மிகவும் குறிப்பிடத் தக்கதாகும். இதன்படி இந்திய விடு தலை முழுக்கத்திற்கு வடிவம் கொடுக் கும் வகையில் கோவை சூலூர் விமா னப்படை தளத்திற்கு தீ வைப்பது என்ற முடிவினை தொழிலாளர்கள் கையிலெடுத்தனர். 26.8.1942ஐ இதற் கான நாளாக முடிவு செய்தனர். இதற்கு முன்பாக சூலூர் மற்றும் அதையொட் டிய வட்டாரங்களில் ரகசிய கூட்டங்கள் நடத்தப்பட்டு போராட்ட வீரர்கள் தேர்ந் தெடுக்கப்பட்டனர். முந்நூற்றுக்கும் மேற்பட்டோர் தயாரானார்கள்.  தகவல் தெரிவிப்போர், தீ பந்தம் பிடிப்போர், தீயிடுவோர், பாதுகாப்பு வீரர்கள் என அணி, அணியாக திட்டமிடப்பட்டு விமா னப்படை தளத்திற்கு சென்றனர். அவ் வாறே நள்ளிரவில் படைத்தளத்திற்கு அருகே இருந்த லாரிக்கு தீவைத்து தீயை பரவச் செய்தனர். படைத்தளப் பகுதியே தீக்காடாக மாறியது.

இந்திய விடுதலைப் போராட்ட அறிவிப்பான வெள்ளை யனே வெளியேறுப் போராட்டம் கோவை மண்ணில் விடு தலை வீரர்களை ஆவேசமிக்க போராட் டங்களுக்கு உந்தித் தள்ளியது. அதில் சூலூர் விமானப்படை தளத்திற்கு தீ  வைத்த போராட்டம் மிகவும் குறிப்பிடத் தக்கதாகும். இதன்படி இந்திய விடு தலை முழுக்கத்திற்கு வடிவம் கொடுக் கும் வகையில் கோவை சூலூர் விமா னப்படை தளத்திற்கு தீ வைப்பது என்ற முடிவினை தொழிலாளர்கள் கையிலெடுத்தனர். 26.8.1942ஐ இதற் கான நாளாக முடிவு செய்தனர். இதற்கு முன்பாக சூலூர் மற்றும் அதையொட் டிய வட்டாரங்களில் ரகசிய கூட்டங்கள் நடத்தப்பட்டு போராட்ட வீரர்கள் தேர்ந் தெடுக்கப்பட்டனர். முந்நூற்றுக்கும் மேற்பட்டோர் தயாரானார்கள்.  தகவல் தெரிவிப்போர், தீ பந்தம் பிடிப்போர், தீயிடுவோர், பாதுகாப்பு வீரர்கள் என அணி, அணியாக திட்டமிடப்பட்டு விமா னப்படை தளத்திற்கு சென்றனர். அவ் வாறே நள்ளிரவில் படைத்தளத்திற்கு அருகே இருந்த லாரிக்கு தீவைத்து தீயை பரவச் செய்தனர். படைத்தளப் பகுதியே தீக்காடாக மாறியது.

இப்போராட்டங்களில் கள வீரர் களாக இருந்த கே.வி.ராமசாமி, கே.பி. திருவேங்கிடம் இருவரின் புகைப்படங்களை வெளியிட்டு கண்டு பிடித்து தருவோருக்கு ரூ.500 இணாம்  தருவதாகவும் அன்றைய ஆங்கிலேய அரசு அறிவித்தது. சூலூர் எஸ்.டி.சம் பந்தம், பதி என்கிற இருளப்பன், அனு மந்தராவ், பள்ளபாளையம் சேதுபதித் தேவர்,கே.பி.சின்னையன், காடாம்பாடி இராமசாமி போன்றவர்கள் சிறை தண்ட னைக்கு உள்ளானர்வகளில் குறிப்பிடத் தக்கவர்களாவார்கள். 

(ஆதராம்  புலவர் செந்தலை ந.கவுதன் ஆசியராகக் கொண்டு  சூலூர் பாவேந்தர் பேரவை வெளிட்ட சூலூர் வரலாறு நுல்)