tamilnadu

ரயில் ரத்து, பாதை மாற்றம் குறித்து தகவல்கள் அறிய உதவி மையங்கள்

சேலம், ஆக.18- சேலம் ரயில்வே கோட்டத்திற்கு உட் பட்ட பகுதிகளில் ரயில்கள் ரத்து, பாதை  மாற்றம் செய்யப்பட்டுள்ளதால், அது  பற்றிய தகவல்களை தெரிவிக்க சேலம்,  கோவை, ஈரோடு, திருப்பூர் ரயில் நிலையங் களில் உதவி மையங்கள் ஏற்படுத்தப்பட் டுள்ளது. சேலம் ரயில்வே கோட்டத்திற்குட்பட்ட ஈரோடு ரயில்வே யார்டு பகுதியில், இன்டர் லாக்கிங் பணிகள் சனிக்கிழமை (ஆக.17) துவங்கி உள்ளது. இப்பணிகள் வரும் 21ந்  தேதி வரை நடைபெறுகிறது. இதனால்  சென்னை-சேலம்-கோவை மார்க்கத்தில் இயங்கும் 20க்கும் மேற்பட்ட ரயில்களும்,  கோவை, சேலம் வழியே வட மாநிலங் களுக்கு இயக்கப்படும் 10க்கும் மேற்பட்ட  ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது. பல  ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப் படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் ரத்து, பாதை மாற்றம் குறித்து  தகவல்கள் பயணிகள் அறிவதற்கும், முன் பதிவு செய்தவர்கள் டிக்கெட் கட்ட ணத்தை திரும்ப பெற வசதிகள் செய்யப் பட்டுள்ளது. இதன்படி சேலம், கோவை, ஈரோடு, திருப்பூர், கரூர் ஆகிய ரயில்வே நிலையங்களில் உதவி மையங்கள் 24 மணி  நேரமும் டிக்கெட் பரிசோதனை அலுவ லர்கள் பணியில் இருப்பார்கள். அவர்கள், பயணிகளின் சந்தேகத்தை தீர்த்து வைப் பதுடன், ரத்தான ரயில்களில் முன்பதிவு செய்தவர்களுக்கு டிக்கெட் கட்டணத்தை திரும்ப வழங்க உரிய வழிமுறைகளை எடுத்துரைப்பார்கள். மேலும் இந்த உதவி மையங்களை தொடர்பு கொள்ள தனியாக தொலைபேசி எண்களையும் கோட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இதன்படி சேலம்:0427-2330194, ஈரோடு:0424-2284812, திருப்பூர்:0421-2200568, கோவை:0422-2303167, கரூர்:0432-4232139 ஆகியவற்றை பயணிகள் தொடர்பு கொள்ளலாம்.  மேலும், கோட்ட கட்டுப்பாடு அறையை  138 எண் மூலம் தொடர்பு கொண்டு, விவரங் களை கேட்டறியலாம். இந்நிலையில் ஒரு  பகுதி மட்டும் ரத்தான ரயில்களில் ஏற்றப் பட்ட பார்சல்களை உரிய முறையில் பாது காக்க, முக்கிய ரயில்வே நிலையங்களில் தலைமை பார்சல் மேற்பார்வையாளர் நியமிக்கப்பட்டுள்ளார். அந்த பார்சல்களை அடுத்து வரும் ரயில்களில், குறிப்பிட்ட இடத்திற்கு அனுப்பி வைக்கவும் நடவ டிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  அதேபோல், பயணிகளுக்கு தேவை யான உணவுகளை கொடுக்க கேட்டரிங் வசதியும் செய்யப்பட்டுள்ளது. எனவே பயணிகள், சேலம் கோட்ட ரயில்வே நிலையங்களில் உரிய உதவிகளை அலுவ லர்களிடம் பெறலாம் என கோட்ட நிர் வாகம் தெரிவித்துள்ளது.