ஏற்காடு, நவ.22- ஏற்காட்டில், வெள்ளியன்று கடும் மூட்டம் நிலவிய தால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகினர். சேலம் மாவட்டம், ஏற்காட்டில் வெள்ளியன்று காலை முதல் மாலை வரை கடும் பனி மூட்டம் நிலவியது. இதனால் ஏற்காடு மலைப்பாதையில் 19 ஆவது கொண்டை ஊசி வளைவு வரையில் பனிமூட்டம் இல்லாத நிலையில், ஏற் காடு மலைப்பகுதியில் மட்டும் கடும் பனிமூட்டம் நில வியது. அங்கு 10 அடி தொலைவில் இருப்பவர்கள் கூட கண்ணிற்கு தெரியாத அளவிற்கு பனிமூட்டம் நிலவிய தால், ஏற்காடு சாலையில் சென்ற வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி மெதுவாக ஊர்ந்தபடி சென்றன. மேலும் வியாழனன்று காலை முதல் மதியம் வரை தொடர்ந்து லேசான சாரல் மழை பெய்தது குறிப்பிடத் தக்கது.