tamilnadu

img

சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு

நொய்யல் ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடினாலும் நகருக்குள் வந்தவுடன் கழிவுகளால் வெள்ளை நுரையுடன் தண்ணீர் காணப்படுகிறது. நொய்யல் ஆற்று நீர் புட்டுவிக்கி அருகே வரும் போது அங்கு செயல்படும் சலவை ஆலைகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் நேரடியாக ஆற்றில் கலக்கிறது. இதனால், ஆற்று நீர் மாசுபட்டு அதிக நுரையுடன் காணப்படுவதாக கூறப்படுகிறது. ஆகவே, இந்த கழிவுகளை தடுக்க அரசு நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

கோவை, ஆக. 5- சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதி யில் பெய்து வரும் கனமழையின் காரணமாக நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள் ளது.  கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் சிறுவாணி நீர்ப்பிடிப்பு, அடிவாரம் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் பெரியாறு, சின்னாறு, ஏழு வாய்க் கால், தொளாயிரம் மூர்த்திகண்டி, பாபநாசம் உள்ளிட்ட ஓடைகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. மேலும், ஞாயிறன்று இரவு முதல் தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் நொய்யல் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள் ளது. நொய்யல் ஆற்றின் முதல் அணைக்கட்டான சித்திரைச் சாவடி அணையில் இருந்து புதுக் குளம், உக்குளம், நரசம்பதி, செல் வம்பதி உள்ளிட்ட குளங்க ளுக்கு தண்ணீர் திறந்துவிடப் பட்டுள்ளது. மேலும், பேரூர்- வேட பட்டி செல்லும் சாலையில் நொய் யல் ஆற்றில் சமீபத்தில் அமைக்கப் பட்ட தற்காலிக பாலம் நொய் யல் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக வெள்ளத் தில் மூழ்கியது. இதனால், சாலை துண்டிக்கப்பட்டது. இதன் காரணமாக வேடப் பட்டி, வடவள்ளி, மருதமலை, துடி யலூர், காரமடை பகுதிகளில் இருந்து பேரூர் பகுதிக்கு சுமார் 10 கிலோ மீட்டர் சுற்றிவர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இத னால், பொதுமக்கள் அவதிக்குள் ளாகியுள்ளனர். வெள்ளப்பெ ருக்கு காரணமாக நொய்யல் ஆற்றின் கரையோரத்தில் உள்ள வர்களுக்கு வெள்ள அபாய எச்ச ரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், குனியமுத்தூர், வெள்ள லூர், குறிச்சி குளங்களுக்கு தண் ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதில், குனியமுத்தூர் கால்வாய் கரையில் உடைப்பு ஏற்பட்டது. இதனை சரிசெய்யும் பணி யில் அதிகாரிகள் ஈடுபட்டனர். ஆறு, குளங்களில் நீர் வரத்து அதி கரித்து உள்ளதால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். தொடர் மழை காரண மாக பூண்டி உள்ளிட்ட மலை கிராமங்களில் வசிக்கும் ஆதிவாசி மக்கள் வீடுகளில் முடங்கி உள்ள னர். மேலும், திங்களன்று காலை யில் கோவை மாநகர் முழுவதும் பெய்த மழையின் காரணமாக பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இந்நிலையில், அடுத்த இரண்டு நாட்களுக்கு மழைக்கான வாய்ப்பு இருப்பதாக காலநிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.  தொடர்மழையின் காரணமாக கோவை குற்றாலம் அருவியில் தண்ணீர் அதிகளவில் கொட்டு வதால் குற்றாலத்திற்கு சுற்றலா பயணிகள் செல்ல வனத்துறை யினர் தடைவிதித்துள்ளனர். அரு வியில் தண்ணீர் அளவு குறைந் தால் மட்டுமே மீண்டும் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப் படும் என வனத்துறையினர் தெரி வித்துள்ளனர்.