தருமபுரி, ஜூலை 7- தருமபுரி அருகே சாலையின் நடுவே உள்ள பாதாளச் சாக்கடை மூடிகளால் விபத்து ஏற்பட்ட வாய்ப்புள்ளதால் என வாகன ஓட்டிகளுக்கு அச்சமடைந்துள்ளனர். தருமபுரி நகராட்சிக்கு உட்பட்ட ராமாக்காள் ஏரி அருகே, மதிக்கோன்பாளையம்- திருப்பத்தூர் பிரிவு சாலையில் இருந்து அரசு மருத்துவமனை வரை சாலையில் பாதாள சாக்கடை கால்வாய் அமைக்கும் பணிகள் நடைபெற்றது. சில இடங்களில் பாதாள சாக்கடையின் பழைய மூடிகளை அகற்றி, புதிய மூடிகள் அமைக்கப்பட்டன. அந்த மூடிக ளில் உயரத்துக்கேற்ப தார்ச்சாலை சில இடங்க ளில் அமைக்கப்பட்டது. பல இடங்களில் அமைக் கப்படவில்லை. குறிப்பாக அக்ரஹாரதெரு, ஹரிஹரநாதர்தெரு, கந்தசாமி வாத்தியார் தெரு, நாச்சியப்பர் கவுண்டர் தெரு, சித்த வீரப்பசெட்டி தெரு, நகராட்சி அலுவலகம் சாலை, காந்திநகர் விஜய் வித்யாலயா சாலை, நாட்டாண்மை புரம் ஆகிய பகுதிகளில் சாலையின் நடுவே பாதாள சாக்கடை மூடிகள் புதிதாக மாற்றப் பட்டது. பல மாதத்துக்கு மேலாகியும், அந்த மூடிக ளின் உயரத்துக்கு, தார்ச்சாலை அமைக்கப்பட வில்லை. மேலும், பாதாள சாக்கடை மூடிகள் அருகே சாலையில் குழிதோண்டப்பட்டு அவற்றை மூடாமல் நீண்ட நாட்களாக உள்ளது. அவ்வழியாக, இருசக்கர வாகனம் போன்ற வாகனங்களில் வருபவர்கள், மூடிகளின் மீதேறி, தடுமாறி, கீழே விழுகின்றனர். எனவே, விபத்துகளைத் தடுக்கும் வண்ணம் மூடிகளின் உயரத்துக்கேற்ப தார்ச்சாலை அமைக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதிமக்கள் மாவட்ட நிர்வாகத்தை வலியு றுத்தியுள்ளனர்.