tamilnadu

img

நீராதார ஆக்கிரமிப்பை அளவிடும் பணி பாதியில் நிறுத்தம்

அவிநாசி செப்.9- அவிநாசி அருகே நீர்வழித்தட ஆக்கிரமிப்பை அளவி டும் பணி நிறுத்தி வைக்கப்பட்டது. அவிநாசி, மடத்துப்பாளையம் பகுதியில் நீர்வழித் தடம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதை அகற்ற வேண்டும் என  சுப்ரமணியம் என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கில் ஆக்கிரமிப்பு  பகுதியை நில அளவை செய்து, அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என பொதுப்பணி துறையினருக்கு நீதிமன்றம்  வழிகாட்டியது. இதனைத் தொடர்ந்து வருவாய்த் துறையி னரின் உதவியுடன் நில அளவை செய்ய பொதுப் பணித்துறை அதிகாரிகள் முற்பட்டனர். நில அளவைப் பணிக்கு அப்பகுதியில் வசிக்கும் சிலர்  ஆட்சேபணை தெரிவித்தனர். ஞாயிறன்று மீண்டும் வரு வாய் துறை, நில அளவை மற்றும் பொதுப்பணித்துறை அலுவலர்கள் கூட்டாக சென்று, நில அளவை செய்ய முற்பட் டனர். நில அளவைப் பணியைத் தடுத்த அதே பகுதியைச் சேர்ந்தவர்கள் கூறுகையில்,நில அளவை செய்வது தொடர் பாக எங்களுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கவில்லை; கால அவகாசம் வழங்க வேண்டும் எனக் கூறினார் வருவாய் துறையினர், உங்களின் பட்டா நிலத்தை நாங் கள் சர்வே செய்யப்போவதில்லை. அரசு புறம்போக்கு மற் றும் நீர்வழித்தடத்தையும், அதில் ஆக்கிரமிப்பு உள்ளதா என்பதையும் தான், சர்வே செய்யவுள்ளோம் என்றனர். இருப்பினும், குடியிருப்புவாசிகள் சர்வே செய்ய அவகா சம் கேட்டதால், அவர்களிடம் இருந்து ஆட்சேபணை கடி தம் பெற்று வருவாய்த்துறையினர் சர்வே செய்யாமல் திரும் பினர்.