நாமக்கல், நவ.28- நாமக்கல் மாவட்டம், எலச்சி பாளையம் அருகில் திருமணி முத்தாற்றில் உள்ள தரைமட்ட பாலத்தை சீரமைக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராட்டம் நடத்துவதாக அறிவித் திருந்த நிலையில், ஊராட்சி நிர்வாகம் பாலத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம், கொத்தம் பாளையத்தில் செல்லும் திருமணி முத்தாற்றில் தரைமட்ட பாலம் உள்ளது. இப்பாலத்தின் வழியாக 10க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு செல்லும் பிரதான சாலையாக உள்ளது.சேலம் மாவட்டம், நாமக்கல் ஆட்டையாம்பட்டி,மல்ல சமுத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்யும் போது திருமணி முத்தாற்றின் வழியாக சென்று காவிரி ஆற்றில் வெள்ள நீர் கலக் கிறது. திருமணிமுத்தாற்றில் உள்ள தரைமட்ட பாலத்தை மேம்பால மாக மாற்ற 40 வருடங்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். இக் கோரிக்கையை நிறைவேற்ற சில மாதங்களுக்கு முன்பு அமைச்சர் பி. தங்கமணி மேம்பாலம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினார். இதற்காக ரூ.3 கோடியே 54 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் மேம் பாலம் கட்டும் பணிகள் துவக்கப் படாமல் கிடப்பில் போடப்பட்டன.
மேலும் தரைமட்ட பாலத்தின் கீழ் மூன்று குடிநீர் குழாய்கள் செல் கிறது. இந்த குடிநீர் குழாயில் அடைப்பு ஏற்பட்டு தண்ணீர் முழு வதும் பாலத்தின் மேலே சென்று கொண்டிருந்தது. இதனால் இவ் வழியாக செல்லும் இருசக்கர வாக னத்தில் செல்வோர் மற்றும் நடந்து செல்லும் பள்ளி மாணவர்கள் உட்பட பலர் கீழே விழுந்து விபத்து ஏற்பட்டது. இதனால் 5 கி.மீ., தூரம் சுற்றித்தான் பள்ளி மற்றும் வெளி யூர் வேலைகளுக்கு இப்பகுதி மக்கள் சென்று வருகின்றனர். இதனை அறிந்த மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியினர் நூதன போராட் டமாக தரைமட்ட பாலத்தில் வழுக்கி விழும் போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்தனர்.
இதையடுத்து, ஊராட்சி நிர் வாகம் மற்றும் நெடுஞ்சாலைத் துறையினர் பொக்லைன் மூலம் தரைமட்ட பாலத்தின் கீழ் உள்ள அடைப்புகளை சரி செய்தனர். மேலும் குடிநீர் குழாய்களில் உள்ள அடைப்பை நீக்கி தண்ணீரை வெளி யேற்ற நடவடிக்கை எடுத்தனர். இதனால் அப்பகுதி மக்கள் பாலத் தின் வழியாக தற்போது சென்று வருகின்றனர். மேலும் நெடுஞ் சாலைத்துறையின் கோட்ட நிர் வாகம் அலுவலர் முருகேசன் நேரில் வந்து அப்பகுதிமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் மேம்பாலம் அமைப்பதற் கான பணிகளை இரு வாரத்திற்குள் துவங்குவதாகவும், தரைமட்ட பாலத்தில் பொதுமக்களுக்கு எவ்வித விபத்தும் ஏற்படாமல் பார்த்துக் கொள்வதாகவும் உறுதி அளித்தனர். இதனால் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் நடத்த இருந்த நூதன போராட் டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப் பட்டுள்ளது.