கோவை, ஆக. 20- மூன்று மாதம் ஊக்கத்தொகை வழங் காததைக் கண்டித்து கோவை அரசு மருத்துவ மனையில் பயிற்சி மருத்துவர்கள் உள்ளி ருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவை அரசு மருத்துவமனையில் தினமும் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெளி நோயாளிகள், 2 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட உள்நோயாளிகளும் சிகிச்சை பெற்று வருகின்றனர். கோவை மட்டுமன்றி திருப்பூர், ஈரோடு, நீலகிரி மற்றும் அண்டை மாநிலமான கேரளா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து நோயாளிகள் சிகிச்சை பெற்று செல்கின்றனர். இப்படி ஆயிரக்க ணக்கான நோயாளிகள் வந்து செல்லும் கோவை அரசு மருத்துவமனையில் நோயா ளிகளுக்கு சிகிச்சை கொடுக்க குறைந்த அளவிலேயே மருத்துவர்கள் உள்ள நிலை யில், சி.ஆர்.ஆர்.ஐ.பயிற்சி மருத்துவர்கள் மற்றும் முதுநிலைப் படிக்கும் மருத்துவர் களை வைத்து சிகிச்சைகள் அளிக்கப்படு கிறது. இதனிடையே, இந்த பயிற்சி மருத்து வர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகை கடந்த மூன்று மாதங்களாக வழங்கப்பட வில்லை. இந்நிலையில் செவ்வாயன்று காலை பயிற்சி மருத்துவர்கள் தங்களுக்கான ஊக்க தொகையை உடனடியாக வழங்கக் கோரி மருத்துவமனை வளாகத்தில் உள் ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவை அரசு மருத்துவமனையில் உள்ள அனைத்து பிரிவுகளிலும் மருத்துவருக்கு உதவியாக பணியாற்றி வரும் 280 பயிற்சி மருத்துவர்களும் பணிகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.