கோவை மாவட்டம், பொள்ளாச்சி அடுத்த மாக்கினாம்பட்டியில் 75 ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. முன்பு அப்பள்ளியில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை மட்டுமே நடத்தப்பட்டது. அதன் பிறகு மாணவர்கள் வெளியே சென்று படிக்க போதிய வசதி இல்லாததால், ஊர் பொதுமக்கள் உயர்நிலைக் கல்வியை கொண்டுவர வேண்டும் என பலமுறை அரசுக்கு கோரிக்கை வைத்து வந்தனர். இதனையடுத்து கடந்த 2014 ஆம் ஆண்டு மாக்கினாம்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. இதில் 1 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் இப் பள்ளியில் மாக்கினாம் பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள பாலமநல்லூர் புதூர், வைகை நகர், கல்லாங் காடு, ஜோதிநகர், அமைதி நகர், நேருநகர் என பல்வேறு பகுதிகளிலிருந்து சுமார் 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். தரம் உயர்த்தப் பட்ட அரசு உயர்நிலைப் பள்ளியில் போதிய உள் கட்டமைப்பு வசதிகளும் மற்றும் கழிப்பிட வசதி, விளையாட்டு மைதானம் உள்ளிட்ட வசதிகள் எதுவும் செய்து தரப்படவில்லை. குறிப்பாக பள்ளிக்கட்டிடங் கள் சிதிலமடைந்து இடிந்து விழும் நிலையில் இருந்து வந்தது. கடந்தாண்டு பெய்த கனமழையால் மழைநீர் வகுப்பறைக்குள் புகும் அவல நிலை ஏற்பட்டது.இதன்பிறகு மாணவர்களின் பெற்றோர் கள் உயிருக்கு ஆபத்தாக இருக்கும் இந்த கட்டிடங் களை உடனடியாக அரசு புதுப்பித்து தர வேண்டும் என பள்ளியை முற்றுகை யிட்டு போராட்டங்கள் நடத்தி பலமுறை அரசுக்கு கோரிக்கை வைத்தனர். அதன்பிறகு, மாக்கினாம் பட்டியிலிருந்து சுமார் மூன்று கிலோமீட்டர் தொலைவில் திருமலை நகரில் அமைந் துள்ள அரசுக்கு சொந்தமான இ-சேவை மைய கட்டிடம் தற்காலிக பள்ளியாக மாற்றப் பட்டது. ஆனால் மிகத் தொலைவில் உள்ள இந்த அரசு இ- சேவை மையத் திற்கு மாணவர்கள் வரு வதற்கு போதுமான போக்கு வரத்து வசதிகள் இல்லை. இதனால் மூன்று கிலோ மீட்டர் நடந்து சென்று படிக்கும் சூழ்நிலை மாணவர்களுக்கு ஏற்பட்டது. தற்போது இரண்டு ஆண்டுகளாகியும் எந்த வித நடவடிக்கையும் அரசு தரப்பில் இருந்து எடுக்கவில்லை. தற்காலிகமாக தங்க வைக்கப்பட்ட அதே இ-சேவை மையத்தில் பள்ளி இயங்கி வருகிறது. இவ்வாறு முறையான கட்டமைப்பு வசதி மற்றும் அடிப்படை வசதிகள் எதுவுமில்லாமல், வகுப்பறைகள் இல்லாமல் இ-சேவை மைய அலுவல கத்துக்காக கட்டப்பட்ட சிறிய, சிறிய அறைகளில் மிகவும் நெருக்கமாக மாணவர்களை அமர்த்தி பாடம் எடுப்பதால் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாவதாக மாணவர்கள் குற்றம்சாட்டு கின்றனர். இதுகுறித்து தீ இனிது இலக்கிய இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சோழ நிலா என்பவர் கூறுகையில், தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளில் 46 அரசுப்பள்ளி களை அரசே மூடியுள்ளது. மேலும் கிராமங்களில் தனி யாக செயல்பட்டு வருகின்ற ஆரம்பப்பள்ளிகளை நகரங் களிலுள்ள உயர்நிலைப் பள்ளிகளுடன் இனைத்து தவறான முயற்சியில் கல்வித் துறை ஈடுபட்டு வருகிறது. மேலும் ஒரு ஆசிரியருக்கு ஒரு மாணவர் என்ற அவல நிலைக்கு அரசுப்பள்ளிகள் தள்ளப்பட்டுள்ளன. இதற்கு காரணமும் அரசே தான். சரியான முறையில் பாதுகாப் பான கட்டிடங்களை அரசு கட்டமைப்பு செய்து தருவ தில்லை. சுகாதாரம் இன்னும் கேள்விக்குறியாகவே உள் ளது. குடிநீர் வசதி, சத்து ணவு போன்றவை தூய்மை யாக இருப்பதில்லை. பாடத் திட்டத்திற்கு ஏற்ப ஆசிரியர் களை கல்வித்துறை நிர்வாகம் நியமிப்பதும் இல்லை. தற்போதைய சூழலில் அரசு ஆரம்பபள்ளிகளில் ஒரு தலைமை ஆசிரியர் ஒரு ஆசிரியர் மட்டுமே உள்ளனர். அவர்களுக்கு மாணவர்கள் குறித்த அட்டவணை ரெக் கார்ட் தயாரிக்க சொல்லி வேலைப்பழு கொடுத்தும், மாணவர்களுக்கு பாடம் எடுக்க நேரமின்றி சிரமப் படுத்தி வருகின்றனர். இத னால் அரசுப்பள்ளிகளில் மாணவர்கள் கல்வி கற்கும் திறனில் பின்தங்கியுள்ளனர். மாணவர்களின் நலனில் அக்கறை கொண்டு பாடத் திற்கேற்ப ஆசிரியர்கள் நிய மிக்கப்பட வேண்டும். கட்டி டங்கள் பாதுகாப்பான முறையில் உள்ளதா என கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து பள்ளிக்கல்வித் துறைக்கு தெரிவிக்க வேண் டும். இதுதொடர்பாக உட னடியாக தமிழக கல்வித் துறையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார். -மணியாழன்