இளம்பிள்ளை, ஜன. 13- இடங்கணசாலை பேருந்து நிலையம் அருகே அரசு மதுபானக் கடையில் மது அருந்திவிட்டு மது பிரியர்கள் அட்டகாசம் செய்வதால் பயணிகள் மிகுந்த அச்சத்துடன் வந்து செல்கின்றனர். இச் செயலை காவல் துறையினர் அலட்சியத்து டன் செயல்படுவதாகவும் பொதுமக்கள் குற்றஞ் சாட்டி உள்ளனர். சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே உள்ள இடங்கணசாலை பேருந்து நிலையம் மிக அருகா மையிலேயே அரசு மதுபான கடை உள்ளன. இத னால் குடிமகன்கள் அங்கு மது அருந்திவிட்டு பேருந்து நிலையத்திற்கு உள்ளே வந்து பகல் மற்றும் இரவு நேரங்களிலும் தகராறில் ஈடு பட்டு வருவதும், மேலும் மதுபிரியர்கள் அரை நிர்வா ணத்துடன் அடிக்கடி சுற்றுவதுடன் அங்குள்ள பய ணிகள் நிழல் கூடத்தை குடிமகன்கள் ஆக்கிரமிப்பு செய்து படுத்து உறங்கி வருகின்றனர். இதனால் பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மிகுந்த அச்சத் துடன் சென்று வருகின்றனர். இது குறித்து காவல்துறையிடம் தெரிவித்தும், கண்டுகொள்வதில்லை என பொதுமக்களும், பய ணிகளும் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும் பேருந்து நிலையம் வாளகத்தில் மகுடஞ்சாவடி காவல் உதவி மையம் உள்ளது. ஆனால், அது பயன்பாட்டில் இல் லாமல் இருப்பதால் மதுபிரியர்கள் எவ்வித அச்ச மின்றி இருந்து வருகின்றனர்.