கோவை, ஆக.3- கோவை மாநகராட்சி பள்ளி மாணவர்கள் ராட்சத பலூன் மூலம் விண்ணிற்கு விதைகளை அனுப்ப உள் ளனர். ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா அமைப்பு சார்பில் வரும் ஆக.11 ஆம் தேதி சென்னையில் விண்ணை நோக்கி ராட்சத பலூன் அனுப்பும் நிகழ்வு நடைபெற உள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 65 ஆயிரம் முதல் 1 லட்சத்து 35 ஆயிரம் அடி வரை செல்லும் பலூன், அடுத்த 4 மணி நேரத்தில் தரையிறக்கப்படுகிறது. இந்த பலூனில் புவியில் உபயோ கிக்கும் பொருட்களை வைத்து அனுப்பி அவை கதிர்வீச்சு களால் பாதிக்கப்படுகிறதா? என்று சோதனை செய்யப் படுகிறது. தமிழக அளவில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் 10 பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் பங்கேற்கும் இந்த நிகழ்வில் கோவை மசக்காளிபாளையம் பகுதியில் உள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளியை சேர்ந்த 5 மாண வர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து பள்ளி தலைமையாசிரியர் மைதிலி கூறிய தாவது, எங்கள் பள்ளி மாணவர்கள் விதைகளை ராட்சத பலூனில் விண்ணுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளனர். இதற்காக தக்காளி, நெல், மிளகாய் மற்றும் சூரியகாந்தி விதைகள் வாங்கப்பட்டுள்ளன. இவைகளை கதிர்வீச்சு பாதிக்காத வகையிலும், கதிர்வீச்சால் பாதிக்கும் வகையி லும் பலூனில் வைக்க உள்ளனர். பலூன் கீழே வந்ததும் அந்த விதைகளை மண்ணில் விதைக்க உள்ளோம். இதன் மூலம் கதிர் வீச்சால் பாதிக்கப்படாத மற்றும் பாதிக்கப் பட்ட விதைகள் வளரும் தன்மை குறித்து தெரிந்து கொள்ள மாணவர்கள் ஆர்வத்துடன் உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.