tamilnadu

img

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை கண்டித்து பொதுக்கூட்டம்

உதகை,பிப்.10- குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை கண்டித்து எருமாட்டில் திங்களன்று கண்டன பொதுக்கூட்டம் நடை பெற்றது. நீலகிரி மாவட்டம், எருமாடு  பஜாரில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியினர் சார்பில் குடியு ரிமைத் திருத்தச் சட்டத்தை கண்டித்து கண்டன பொதுக்கூட்டம் நடை பெற்றது. இந்த பொதுக்கூட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் அமீது மாஸ் டர் தலைமை வகித்தார். திமுக இளை ஞர் அணி நிர்வாகி நௌபல், சேரங்கோடு பஞ்சாயத்து தலைவர் அவராச்சன், இந்திய முஸ்லிம் லீக்  கட்சியின் ஆசிஃப், மாவட்ட பஞ்சா யத்து வார்டு உறுப்பினர் ஹனீபா மாஸ்டர், கிராம ஊராட்சி தலைவர் லில்லி ஆகியோர் கண்டன உரை ஆற்றினர்.நிறைவாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இடைக்குழு உறுப்பினர் டி.கே.திலீப் நன்றி கூறினார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.  மேலும், வருகின்ற 16- ஆம் தேதி சேரங்கோட்டில் மாபெரும் பேரணி நடத்திட திட்டமிட்டுள்ளனர்.