ஈரோடு, ஆக. 5 - நசியனூர் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் பள்ளி அருகே அமைக்கப்பட்டுள்ள குப்பைகள் எரிக்கும் இயந்திரத்தால் குழந்தைகள் பாதிக்கப்பட்டு வருவதாக பெற்றோர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அனித்தனர். ஈரோடு மாவட்டம், நசியனூர் பேரூராட்சி சார்பில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் குப்பைகள் எரிக்கும் இயந்திரம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த இயந்திரமானது தனியார் பள்ளி அருகே அமைக்கப்பட் டுள்ளதால் குப்பைகள் எரிக்கும் போது அதில் இருந்து வெளியேறும் நச்சு புகையினால் மாணவ, மாணவியர்க ளுக்கு கண் எரிச்சல், மூச்சுத் திணறல், தொடர் இருமல் உள்ளிட்டவைகளால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே பள்ளி மாணவ, மாணவியர்களின் நலன் கருதி குப்பைகள் எரிக்கும் இயந்திரத்தை வேறு பகுதிக்கு மாற்ற வேண்டும் என்று கடந்த வாரம் பள்ளி மாணவ, மாண வியர்கள், பெற்றோர்கள் நசியனூரில் மறியல் போராட் டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து குப்பைகள் எரிக்கும் பணியினை பேரூராட்சி நிர்வாகம் தற்காலிகமாக நிறுத் திக்கொண்டது. இந்நிலையில், பேரூராட்சி நிர்வாகம் நிரந்தர தீர்வு காணும் வகையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளதையடுத்து திங்களன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்று கிராம மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதில், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் எம்.சசி, மாதர் சங்கத்தின் மாவட்ட தலைவர் பி.லலிதா, மாவட்ட செயலாளர் பி.எஸ்.பிரசன்னா, சிபிஎம் ஈரோடு தாலுகா செயலாளர் எம்.நாச்சிமுத்து, விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் தாலுகா நிர்வாகி இளங்கோ, வாலிபர் சங்கத்தின் நகர நிர்வாகி சி.ஹரிஷ், இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட நிர்வாகி கோ.கோபி ஆகி யோர் உட்பட பலர் பங்கேற்றனர்.