கோவை, அக்.13- கோவையில் கள்ள நோட்டுகளை அச்சடித்து புழக்கத்தில் விட முயன்ற கும் பலை காவல் துறையினர் கைது செய்தனர். கோவை காந்தி்பார்க் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கடை ஒன்றில் பொருட்கள் வாங்குவது போல நடித்து கள்ள நோட்டுகளை இருவர் புழக்கத்தில் விட முயன்றனர். கடைகளில் கொடுத்தது கள்ள நோட்டு என தெரிந்து கொண்ட பொது மக்கள் இருவரையும் பிடித்து சிபிசிஐடி கள்ளநோட்டு தடுப்பு பிரிவு காவல்துறை யிடம் ஓப்படைத்தனர். அவர்களிடம் விசா ரணை மேற்கொண்டதில் அவர்களின் பெயர் பிரவீன்குமார் மற்றும் பூபதி என்பது தெரியவந்தது.
பூபதி ஈரோட்டில் சேர்ந்த வர் என்பதும், பிரவீன்குமார் பாப்பிரெட் டிப்பட்டி என்பதும் விசாரணையில் தெரியவந்தது. அவர்களிடமிருந்து 31 நூறு ரூபாய் கள்ளநோட்டுகளை பறிமுதல் செய்த பிடி பட்ட இருவரையும் ஆர். எஸ்.புரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். ஆர்.எஸ். புரம் குற்றப்பிரிவு காவலர்கள் கள்ள நோட்டுகளுடன் சிக்கிய இருவரிடமும் விசாரணை மேற்கொண்டனர். இதில் கள்ள நோட்டு தயாரிப்பதற்கு மூளையாக தன் ராஜ், ரஞ்சித் ஆகியோர் செயல்பட்டது தெரி யவந்தது. இதனையடுத்து தன்ராஜ், ரஞ்சித் ஆகியோரை கைது செய்து அவர்களிடம் இருந்து 12 லட்ச ரூபாய் கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்தனர். கள்ள நோட்டு தொடர்பாக பிடிபட்ட 4 பேரிடமும் ஆர்எஸ் புரம் காவல்துறையினர் விசாரணை மேற் கொண்டனர். இதில், பிரவீன் குமார் ஐ.ஏ.எஸ். தேர் வுக்கு தயாராகி வந்து இருப்பதும், பூபதி பொறியியல் படிப்பு முடித்து தனியார் நிறு வனத்தில் பணிபுரிந்து வருவதும் தெரிய வந்துள்ளது. மேலும், கோவையில் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட முயன்ற வழக்கில் மூளையாக செயல்பட்ட தன்ராஜ் ஏற்கனவே கள்ளநோட்டு வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளியே வந்து கள்ள நோட்டு அச்சடித்ததும், எளிதில் கண்டு பிடிக்க முடியாத வகையில் நுட்பமாக கள்ள நோட்டுகளை தயாரித்ததும் விசாரணை யில் தெரியவந்துள்ளது. முன்னதாக இதுகுறித்து காவல்துறை யினர் கூறுகையில், கணபதி பகுதியை சேர்ந்த ரஞ்சித் என்பவரிடம் இருந்து கள்ள நோட்டுகளை பெற்றதும், இதையடுத்து ரஞ்சித்தை கைது செய்து விசாரணை நடத்தியதில், துடியலூர் அருகேயுள்ள இடி கரை பகுதியை சேர்ந்த தன்ராஜ் என்பவர் கள்ளநோட்டுகளை அச்சடித்து புழக்கத்தில் விட்டுள்ளார். ரஞ்சித் மூலமாக தன்ராஜை தொடர்பு கொண்ட காவல் துறையினர் ரூ.3 ஆயிரம் கள்ள நோட்டுகள் வேண்டு மென கேட்டுள்ளனர். அதை வாங்குவது போல சென்று கைது செய்து ரூ.12 லட்சம் கள்ளநோட்டுகள், அச்சடிக்க பயன்படுத் திய இயந்திரங்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். இதைதொடர்ந்து தன்ராஜிடம் நடத் திய விசாரணையில் ஏற்கனவே விருது நகரில் கள்ளநோட்டு அச்சடித்த வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளியே வந்து, கடந்த 3 மாதங்களாக கோவையில் கள்ளநோட் டுகளை அச்சடித்தது தெரியவந்தது. மேலும் கள்ளநோட்டுகள் என எளிதில் கண்டுபிடிக்காத வகையில் ரூபாய் நோட்டு களை ஸ்கேன் எடுத்து ஸ்கீரின் பிரிண்டிங் மூலமாக காந்தி உருவத்தை சேர்த்து ஜிகினா பேப்பர்களை சேர்த்தும் நுட்பமாக தயாரித்தது தெரியவந்ததுள்ளது. தொடர்ந்து 4 பேரிடமும் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.