tamilnadu

img

மத நல்லிணக்கம் பாதுகாக்கப்பட்டால்தான் அடிப்படை உரிமைகளைப் பெற முடியும்

திருப்பூர் கருத்தரங்கில் எச்சரிக்கை!

திருப்பூர், நவ. 21- மத நல்லிணக்கம் பாதுகாக்கப் பட்டால்தான் தங்கள் சொந்த வாழ் வாதாரத்திற்கான அடிப்படை உரி மைகளைப் போராடிப் பெற முடி யும் என்று திருப்பூரில் நடைபெற்ற கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது. திருப்பூர் கே.ஆர்.சி. சிட்டி சென் டரில் புதன்கிழமை தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங் கத்தின் சார்பில் மகாத்மா காந்தி யின் 150ஆவது பிறந்த ஆண்டை ஒட்டி மத நல்லிணக்க கருத்தரங்கம் நடத்தப்பட்டது. அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் திருப்பூர் மாவட்டத் தலைவர் க.சண்முகம் தலைமையில் நடைபெற்ற இக்கருத் தரங்கை சமூக நல்லிணக்க இயக்கத் தின் தலைவர் வழக்கறிஞர் பி.மோகன் தொடங்கி வைத்தார். மாவட்டச் செயலாளர் பாலச்சந்தி ரமூர்த்தி வரவேற்றார். இக்கருத்தரங்கில் அரசு ஊழி யர் சங்க முன்னாள் மாநிலச் செய லாளர் அ.நிசார் அகமது, பிஎஸ் என்எல் டிஓடி ஓய்வு பெற்றோர் அமைப்பின் மாநிலத் துணைத் தலைவர் பா.சௌந்தரபாண்டியன், மின்வாரிய ஓய்வு பெற்றோர் அமைப்பின் நிர்வாகி அச்சுதன், ஓய்வு பெற்ற ஆசிரியர் ம.நாட்ரா யன் உள்ளிட்டோர் மத நல்லிணக் கத்தை பாதுகாக் வேண்டியதன் அவசியம் குறித்துப் பேசினர். நிறை வாக ஓய்வு பெற்றோர் அமைப்பின் மாநிலத் துணைத் தலைவர் மு.சுப்பி ரமணியம் நிறைவுரை ஆற்றினார்.

மத நல்லிணக்கத்தை சீர்குலைக் கும் சக்திகள் ஆட்சியில் இருக்கும் நிலையில், தற்போது மத நல்லிணக் கத்தைப் பாதுகாப்பதைப் பற்றி பேச வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஜனநாயக உரிமைகளுக்காக பல போராட்டங்களை நடத்திய அனு பவம் கொண்டவர்கள்தான் தற் போது ஓய்வு பெற்றோர் அமைப்பில் இருக்கின்றனர். வாழ்வாதாரம் சார்ந்த பொருளாதாரக் கோரிக்கை களுக்காகப் போராடுவதாக இருந் தாலும் மத நல்லிணக்கம் பாதுகாக் கப்பட வேண்டும். மத நல்லிணக்கம், சமூக நல்லிணக்கம் இல்லாமல் அடிப்படை உரிமைகளுக்கான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல முடியாது. எனவே மத துவே சத்தையும், வெறுப்பையும், பிரிவி னையையும் ஏற்படுத்தக்கூடிய சக்திகளுக்கு எதிராக மத நல்லிணக் கத்தையும், சமூக நல்லிணக்கத்தை யும் பாதுகாக்கும் பணியை நாம் மேற் கொள்ள வேண்டும் என்று கருத் துரை ஆற்றியோர் தெரிவித்தனர். இதில் ஓய்வு பெற்ற அரசு மற் றும் இதர துறைகளைச் சார்ந்தோர் பெருமளவில் பங்கேற்றனர். முடி வில் சங்கப் பொருளாளர் மேகவர் ணன் நன்றி கூறினார்.