ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் தினசரி சந்தையை அகற்ற எதிர்ப்பு
திருப்பூர், பிப். 10 - ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் திருப்பூர் தினசரி காய்கறி சந் தையை அகற்றிவிட்டு அங்கு நவீன வணிக வளாகம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. உரிய உத்தரவாதம் தராமல் வியாபாரிகளை வெளியேற்று வதை எதிர்த்து அங்கிருக்கும் வியாபாரிகள் 500க்கும் மேற்பட் டோர் முழு அடைப்பு மற்றும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் மேற்கொள் ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருப்பூர் காமராஜர் சாலையில் அமைந்துள்ள தினசரி காய்கறி சந்தையை இடித்து வணிக வளாகம் அமைக்க உள்ளதாகவும், தினசரி மார்க் கெட் இடிக்கப்படும் எனவும் திருப்பூர் மாநகராட்சி ஆணையா ளர் சிவக்குமார் தெரிவித்திருந் தார். திருப்பூர் மாநகராட்சியின் இந்த முடிவைக் கண்டித்து திங் களன்று தினசரி சந்தையில் உள்ள 450 கடைகள் முழு அடைப்பு போராட்டத்தில் அடைக்கப் பட்டன. 500க்கும் மேற்பட்ட வியாபாரிகள் தங்கள் குடும்பத்தி னருடன் திங்களன்று ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட் டத்தில் ஈடுபட்டனர். வியாபாரிகளின் இந்த உண்ணா விரதப் போராட்டத்தை அடுத்து தினசரி சந்தையை இடிக்கும் பணியை மாநகராட்சி அதிகாரி கள் தற்காலிகமாக தள்ளி வைத் துள்ளனர்.