கோவை, ஜூலை 18- வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடித்த சம்பவத்தில் தேடப்பட்டு வந்த நபரை காவல் துறையினர் கைது செய்ய முயன்ற போது தாய் தடுத்து கதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கோவை, கோணவாய்க்கால் பாளையம் பகுதியைச் சேர்ந்த வர் சந்தான முத்து. இவர் மீது ஏற்கனவே பல கொள்ளை வழக் குகள் உள்ளது. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு போத்தனூர் அருகே நடைபெற்ற கொள்ளைச் சம்பவத்தில், காவல் துறையினர் கைரேகை மூலம் சந்தானம் முத்துதான் ஈடுபட்டார் என உறுதிப்படுத்தி தேடி வந்தனர். இவ்வழக்கில் தொடர்புடைய மற்றொரு குற்றவாளியின் உதவி யுடன் சந்தான முத்துவை வியாழ னன்று கோவை நீதிமன்றம் அருகே வரவழைத்தனர். இந்நிலையில், நீதிமன்றம் அருகே தனது தாயுடன் வந்த சந்தானம் முத்துவை மறைந் திருந்த காவல் துறையினர் சுற்றி வளைத்து கைது செய்ய முற்பட்ட னர். இதையடுத்து, சந்தானம் முத்து வின் தாயார் அவரை கைது செய்யக் கூடாது என சாலையில் அமர்ந்து கதறினார். இதனையடுத்து இரு வரையும் காவல்துறை வாகனத் தில் ஏற்ற முயன்றனர். ஆனால், அவர்கள் இருவரும் ஏற மறுத்து கதறி அழுதனர். இதனையடுத்து நீதிமன்றம் அருகே இருந்த வழக்கறி ஞர்கள் பெண் நபரை இழுக்கக் கூடாது என்றும், நீதிமன்றத்திற்குள் வருபவர்களை இப்படி தடுத்து நிறுத்தி கைது செய்யக்கூடாது என காவல் துறையினரிடம் கேட்டுக்கொண்டனர். இந்த சந் தர்ப்பத்தைப் பயன்படுத்திய இரு வரும் அங்கிருந்து விடுபட்டு குற்ற வியல் நடுவர் நீதிமன்றத்திற்குள் சென்றனர். இதனால் காவல் துறை யினர் செய்வதறியாமல் திரும்பிச் சென்றனர்.