அம்பேத்கர் 63ஆம் ஆண்டு நினைவு தினம்
திருப்பூர், டிச. 6 - அண்ணல் அம்பேத்கரின் 63ஆம் ஆண்டு நினைவு தினமான டிசம்பர் 6ஆம் தேதி (வெள்ளியன்று) திருப்பூ ரில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி உள்ளிட்ட பல் வேறு அமைப்பினர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். திருப்பூர் ஈஸ்வரன் கோயில் வீதியில் பூமார்க் கெட் முன்பாக அமைந்திருக்கும் டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட் டத் தலைவர் ஆர்.குமார், மாவட்டச் செயலாளர் ச.நந்த கோபால், துணைச் செயலாளர் சி.கே.கனகராஜ் உள்பட தீண்டாமை ஒழிப்பு முன்னணியைச் சேர்ந்த வர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். அதேபோல் இந்திய மாணவர் சங்கத்தினர் திருப் பூர் சிக்கண்ணா அரசுக் கல்லூரி மைதானத்தில் மாமேதை அம்பேத்கர் உருவப்படத்தை வைத்து மலர் தூவி அவரை நினைவு கூர்ந்தனர். 15 வேலம்பாளையம் பகுதியில் அனுப்பர்பாளை யம், சிறுபூலுவபட்டி, பெரியார் நகர் ஆகிய இடங்க ளிலும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் அம் பேத்கர் படம் வைக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப் பட்டது. இது தவிர ஈஸ்வரன் கோயில் வீதியில் உள்ள அம் பேத்கர் சிலைக்கு தலித் விடுதலைக் கட்சி, திரா விடர் விடுதலைக் கழகம் உள்பட பல்வேறு அமைப் பினரும் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். சாதி ஒழிப்பு உறுதிமொழி ஏற்றனர்.