tamilnadu

img

புதிய கல்விக் கொள்கையை திரும்ப பெறுக விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

சேலம், செப்.6- மத்திய அரசின் தேசிய கல்வி கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஓம லூரில் விடுதலை சிறுத் தைகள் கட்சியின் சார்பில்  தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சேலம் மாவட்டம், ஓம லூர் பேருந்து நிலையம் அருகே உள்ள அண்ணா சிலை முன்பு வெள்ளியன்று விடுதலை சிறுத்தைகளின் இளம்சிறுத்தை எழுச்சி பாசறை சார்பில் மத்திய அரசின் தேசிய கல்வி கொள் கைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அமைப்பாளர் சாமுராய்குரு தலைமை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மத்திய அரசின் தேசிய கல்வி கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன முழக்கங்களை எழுப்பினர். முன்ன தாக, இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஓமலூர் காவல்துறையினர் அனுமதியளிக்க மறுத்த நிலையில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.