tamilnadu

img

தேசிய மாணவர் படையின் சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம்

கோவை, நவ. 3- தேசிய மாணவர் படை அமைப்பின் சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் கோவையில் ஞாயி றன்று நடைபெற்றது.  கோவை புலியகுளம் அந்தோணியார் உயர்  நிலைப்பள்ளியில் பயிலும் தேசிய மாணவர் படை யைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் சங்கரா கண்  மருத்துவ மையத்துடன் இணைந்து இலவச கண் பரி சோதனை முகாம் பள்ளியின் தாளாளர் அருட்பணி  ததேயு.பால்ராஜ் தலைமையில் நடைபெற்றது. தேசிய மாணவர் படை கமான்டிங் அதிகாரி  லெப்டினட் கர்னல் கிரிஸ்பர்தான் முகாமை துவக்கி வைத்தார். இதில், சங்கரா கண் மருத்துவ மைய  மருத்துவர்கள் டாக்டர்.ராமகுமார், டாக்டர்.ரிசிக் குப்தா, டாக்டர்.பூஜா குப்தா ஆகியோர் தலைமையி லான மருத்துவர் குழுவினர் பங்கேற்று கண் பார்வை  குறைபாடு உள்ளவர்களுக்கு பரிசோதனை செய்து  ஆலோசனை மற்றும் இலவச அறுவை சிகிச்சைக்கும் தேர்வு செய்தனர். இம்முகாமில் 250 பேருக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 20 பேர் இலவச கண் அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப் பட்டனர். முன்னதாக தேசிய மாணவர் படையைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் பள்ளியில் பயிலும் மாண வர்கள் தங்கள் பகுதியில் உள்ள கண் குறைபாடு உள்ள வர்களை கண்டறிந்து முகாமுக்கு அழைத்து  வருவதற்கான இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இளம் வயதிலேயே மாணவர்கள் பெரியவர்களுக்கு உதவ வேண்டும் என்ற சேவை மனப்பாண்மை உள்ளம்  கொண்டவர்களாக வளர வேண்டும் என்ற எண் ணத்தோடு நடத்தப்பட்ட இந்த முகாம் மூன்றாவது ஆண்டாக நடைபெற்றது.  இம்முகாமில் பள்ளியின் தலைமையாசிரியை அமலோற்ப்பவமேரி, ராணுவ வீரர்கள் மூர்த்தி, பல்வான் சிங், மணிகண்டன், தேசிய மாணவர் படை அலுவலர் ஜி.ஆல்பர்ட் அலெக்ஸ்சாணடர் உள் ளிட்டோர் பங்கேற்றனர்.