tamilnadu

img

பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் மோசடி

நாமக்கல், ஆக.16 - நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் வட்டம், நாம கிரிப்பேட்டை ஒன்றியம் திம்மநாயக்கன் பட்டி ஊராட்சியில் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் ஊழல் நடைபெற்றுள்ளதாக கிராம  சபைக் கூட்டத்தில் பய னாளிகள் குற்றஞ்சாட்டி உள்ளனர். மத்திய அரசு கடந்த 2015ஆம் ஆண்டு பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா (பிஎம்ஏஒய்) திட்டத்தின் மூலம் 269 சதுர அடியில் காங்கிரீட் வீடு கட்டுவதற்கு நான்கு தவணை முறையில்  மானியத் தொகையாக வழங்கப்படுகிறது. ரொக்கமாக ஒரு லட்சத்தி 70 ஆயிரம் ரூபாய் ஊரக வேலை வாய்ப்பு திட்ட மனித சக்தி நாட்களுக்கு கூலியாக 18 ஆயிரத்து 450 ரூபாயும், தனி நபர் கழிப்பிடம் கட்டுவதற்கு ரூ.12 ஆயிரம்  உட்பட இரண்டு லட்சத்தி 450 ரூபாய்  நிதி ஒதுக்கீடு செய்கின்றது. இந்த திட்டத் திற்கு 100 நாள் வேலைவாய்ப்புத் திட் டத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் பயனாளிகளாக தேர்வு செய்யப்படு கின்றனர். இத்திட்டத்தில் ஒதுக்கப்படும் நிதி போதுமானதாக இல்லை. மேலும் மணல், செங்கல், சிமெண்ட் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ள சூழ்நிலையில், ஐந்து லட்சம் ரூபாய் இருந்தால் மட்டுமே வீடு கட்ட முடியும்.  இந்நிலையில் குடிசைகளில் வாழ்ந்து வரும் ஏழைகளை ஊராட்சி செயலா ளர்கள், ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்கள்  எப்படியாவது தனது திட்டத்தை அமல் படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு வீடு கட்ட முடியாத நபர்களிடம் ஆவணங் களை பெற்று தங்களது பெயரில் வீடு ஒதுக்கி  அதற்கான பணம் வந்துள்ளது.

அதனை எடுத்துத் தரவேண்டும் என்று கூறும் போது  தான் இவர்களுக்கு வீடு கட்ட உத்தரவு  கிடைத்துள்ளது என தெரிய வந்துள்ளது.  மேலும் எழுதப் படிக்க தெரியாத இவர் களிடம் 100 நாள் திட்டத்தில் தங்களுக்கு  பணம் வந்துள்ளது கையெழுத்து  இடுமாறு கூறி கையெழுத்து பெற்றுள்ள தாக தெரிகிறது. இதையடுத்து மானியத் தொகையை அரசு அதிகாரிகளே வங்கியில் இருந்து எடுத்துச் சென்று விடு கின்றனர். இந்நிலையில் சுதந்திர தின கிராம சபைக் கூட்டத்தில், ஏமாற்றப்பட்ட பயனாளிகள் சரமாரியாக கேள்விகள் எழுப்பி உள்ளனர். ராசிபுரம் அருகே உள்ள திம்மநாயக்கன் பட்டி ஊராட்சியில் ஒன்பது வார்டுகள் உள்ளன. இங்கு 4,500க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். வியாழ னன்று சுதந்திர தின நாளில் கிராம சபைக்  கூட்டம் நடைபெற்றது. கிராம சபையை  நடத்துவதற்காக ஊராட்சி ஒன்றிய அலுவல கத்தில் இருந்து பொறியாளர் ரேவதி  மற்றும் ஊராட்சி செயலாளர் உள்ளிட்ட வர்கள் கலந்து கொண்டு குறை களை பற்றிக் பொதுமக்களிடம் கேட்டறிந்தனர்.  அப்போது பிரதமர் வீடு கட்டும் திட் டத்தில் வீடுகள் கட்டுவதற்காக ஒதுக்கப் பட்ட பணத்தை வீடுகள் கட்டாமலே எடுத்துக் கொள்வதாக பயனாளிகள் தெரிவித்தனர். மேலும் கணவர் பேரிலும்  மனைவி என்ற வகையில் வேறு ஒரு  பெண்ணின் பெயரையும் இணைத்து  போலியான ஆவணங்கள் தயார் செய்து  அவர்கள் பெயரில் வீடு கட்டியதாக  அறிக்கையை முன்வைத்தனர். கூட்டத்தில்  பங்கேற்ற ஒருவர் சரமாரியாக கேள்வி களை எழுப்பினார். இதனால் பதில் கூற  முடியாமல் ஊராட்சி செயலாளரும், பொறி யாளரும் தடுமாறினார்கள். இது குறித்து மல்லசமுத்திரம் ஒன்றியம் கொசுவம் பாளையத்தைச்  சேர்ந்த பாப்பா என்ற விவசாயி தொழிலாளி,  கடந்த சில தினங்களுக்கு முன்பு மாவட்ட ஆட்சியரிடம், நான் வீடு கட்டாமல்  எனது பெயரில் வங்கியில் பணம் உள்ள தை எடுத்து தாருங்கள் என்று என்னை கட்டாயப் படுத்திக் வருகின்றனர். ஆகவே என்னை இத்திட்டத்திலிருந்து விடுவிக்க வேண்டும் என ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்திருந்தார்.  இதேபோல், மேற்கு தோட்டத்தைச் சேர்ந்த செல்வராஜ் என்பவர்  கூறியதாவது, 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்திற்கு பணிக்கு வராத நபர்களின் பெயர்களில், பணிக்கு வந்ததாக பதிவு செய்து பணத்தை எடுத்து உள்ளனர். மேலும் எனது தந்தை  இறந்து 23 வருடங்களாகிறது. அவர் பெயரில் கழிப்பிடம் கட்டியதாக ஆவணம்  தயாரிக்கப்பட்டு  மோசடியில் ஈடுபட்டுள் ளனர் என தெரிவித்தார்.  இதுகுறித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மல்லசமுத்திரம் ஒன்றிய குழு உறுப்பினர் சி.சுந்தரம் கூறியதாவது, எழுதப் படிக்கத் தெரியாத ஏழை விவசாயக் கூலித் தொழிலாளர்களிடம் இதுபோன்ற மோசடியில் ஈடுபடும் ஊராட்சி நிர்வா கத்தையும், ஊராட்சி ஒன்றிய நிர்வாகத் தையும், இதற்கு உடந்தையாக உள்ள வங்கியின் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு  திட்டங்கள் உரிய முறையில் ஆய்வு செய்து  முறையாக பயனாளிகளுக்கு  மானியத்  தொகை கிடைக்கிறதா என விசாரணை  செய்து நிதிகளை ஒதுக்கீடு செய்ய  வேண்டும். மேலும் நூறு நாள் வேலை வாய்ப்புத் திட்டத்தில் பெரும் மோசடிகள் நடைபெற்று வருகிறது ஆகவே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  அவர் தெரிவித்துள்ளார்.