கோவை, ஜூலை 18- அமெரிக்காவில் வேலை வாங்கி தருவதாகக் கூறி போலி ஆவணங் களை தயாரித்து மோசடியில் ஈடுபட்ட வாலிபர்கள் மீது அமெரிக்க தூதர கம் கொடுத்த புகாரின் பேரில் குனிய முத்தூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சென்னை அமெரிக்க தூதரகத்தில் இருந்து கோவை மாநகர காவல் ஆணையாளருக்கு புகார் மனு வந்துள்ளது. அதில், கோவை குனிய முத்தூரைச் சேர்ந்த அருண் என்கிற அருண்குமார், இந்திரா நகர் பகுதி யைச் சேர்ந்த அசோக், இடையர் பாளையம் பகுதியைச் சேர்ந்த நிவாஸ் ஆகியோர் ‘ஸ்மார்ட் டாட் இன்டர்நேஷனல்’ என்ற பெயரில் வெளிநாடுகளில் வேலை வாங்கித் தருவதாக குனியமுத்தூர் இடையர் பாளையம் பகுதியில் நிறுவனம் நடத்தி போலி ஆவணங்களைத் தயாரி ப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இவர்கள் அமெரிக்க தூதரகத்தின் ஆவணங்களைப் போலியாக தயாரித்து அனுப்பியுள் ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே, இந்த மோசடி நபர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு புகாரில் தெரிவிக்கப்பட்டதையடுத்து, மாந கர காவல் ஆணையாளர் சம்பந்தப் பட்ட நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்யும்படி உத்தரவிட்டார். இதையடுத்து, இந்த சம்பவத் தில் தொடர்புடைய மூன்று பேரை யும் குனியமுத்தூர் காவல் துறையி னர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இவர்கள் யார் யாரை ஏமாற்றியுள்ள னர், எப்படி ஏமாற்றியுள்ளனர், இவர் களின் பின்னணி என்ன என்பது குறித்தும் விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.