கோவை, ஜன. 25 – அதிமுக பெயரில் போலி இணையதளம் தயாரித்ததாகவும், இரட்டை இலை சின்னத்தைப் பயன்படுத்தியதாகவும் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் அதிமுக முன்னாள் எம்,பி, கே.சி பழனிச்சாமியை கோவையில் சனியன்று காவல் துறையி னர் கைது செய்தனர். நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு தொகுதியில் கடந்த 1989 ஆம் ஆண்டு நாடா ளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப் பட்டார் அதிமுகவைச் சேர்ந்த கே.சி.பழ னிச்சாமி. இதைதொடர்ந்து, காங்கேயம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார். இந்நிலையில், இவர் கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட் டதாக அதிமுகவில் இருந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு நீக்கப்பட்டார். இந்த நிலையில், சனியன்று காலை திடீ ரென கோவை, லாலி சாலையில் உள்ள கே.சி.பழனிச்சாமி வீட்டில் வைத்து சூலூர் காவல் துறையினர் அவரை கைது செய்த னர். இதையடுத்து சுமார் 8 மணிநேரம் சூலூர் காவல் நிலையத்தில் வைத்து விசா ரணை மேற்கொண்டனர். இதுகுறித்து காவல்துறை வட்டாரங் கள் கூறுகையில், முத்து கவுண்டன் புதூர் ஊராட்சி மன்ற தலைவர் கந்தவேல் கொடுத்த புகாரின் பேரில் கே.சி பழனிச்சாமி கைது செய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப் பட்ட அவர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 417 - ஏமாற்றுதல், 418 - நம்பியவர் களை ஏமாற்றுதல், 419 - ஆள்மாறாட்டம் செய்து ஏமாற்றுதல், 464 - தவறான ஆவ ணத்தை உருவாக்குதல், 465 - பொய் ஆவணம் உருவாக்கி ஏமாற்றுதல், 468 - ஏமாற்ற திட்டமிட்டு ஆவணம் உருவாக்கு தல், 479 - சொத்து குறியீட்டைத் தவறாக பயன்படுத்துதல், 481 - தவறான சொத்து குறி யீட்டை பயன்படுத்துதல், 482 - சொத்து குறியீட்டை தவறாக பயன்படுத்தியதற் கான தண்டனை, 485 - சொத்து அடை யாளத்தை உருவாக்கும் கருவியை வைத் திருத்தல் மற்றும் தகவல் தொழில் நுட்ப சட்டம் உள்ளிட்ட 7 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த னர். அதேநேரம், காவல் நிலைய வளாகத் திற்குள் பத்திரிகையாளர்களை அனும திக்க காவலர்கள் மறுத்தனர். சுமார் 8 மணி நேரத்திற்கு மேலாக மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் பாலமுருகன் தலைமை யில் அவர் நீதிபதி முன் ஆஜர்படுத்தப் பட்டார். இதைத்தொடர்ந்து பிப்.7 ஆம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். முன்னதாக, அதிமுகவிற்கு பொதுச்செய லாளர் தேர்தல் நடத்த வேண்டும் என கே.சி. பழனிசாமி தில்லி உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு பிப். 6 ஆம் தேதியன்று விசாரணைக்கு வரவுள்ளது. இதேபோல், பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைப்ப தற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து தொலைக்காட்சி விவாதங்களில் கே.சி.பழனிச்சாமி ஈடுபட்டது பாஜகவினரி டையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி யது. எனவே, பாஜகவின் நிர்பந்தம் கார ணமாகவே எம்ஜிஆர், ஜெயலலிதாவின் தீவிர விசுவாசியான கே.சி.பழனிச்சா மியை கைது செய்துள்ளதாக என அதி முகவின் ஒரு பிரிவினர் கருத்து தெரிவித் தனர்.