tamilnadu

img

கஞ்சா கடத்திய அதிமுக முன்னாள் நிர்வாகி கைது

கோவை, ஜூன் 18- கோவையில் காரில் கஞ்சா கடத் திய முன்னாள் அதிமுக பெண் நிர்வா கியை கைது செய்த போலீசார் அவரி டம் இருந்து 4 கிலோ கஞ்சாவை பறி முதல் செய்தனர். கோவை வடவள்ளி அருகே காரில்  கஞ்சா கடத்தி வருவதாக போலீசா ருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் வடவள்ளி போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட் டிருந்தனர். அப்போது அந்தப் பகுதி யில் சந்தேகத்திற்கிடமான வகை யில் நின்று கொண்டிருந்த காரை  போலீசார் சோதனையிட்டனர்.

அதில்  நான்கு கிலோ கஞ்சா கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. மேலும், அந்த காரில் தென்மண்டல சிஐடி அதிகாரி அடையாள அட்டை, போலி  வருமான வரி அதிகாரி போன்ற போலியான அட்டைகளை பறிமுதல்  செய்த போலீசார் காரில் கடத்தப்பட்ட  4 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். மேலும் இந்த சம் பவம் தொடர்பாக காரில் வந்த திருப் பூர் அவிநாசியைச் சேர்ந்த ஜெயமணி என்பவரைக் கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வரு கின்றனர்.  

கைது செய்யப்பட்ட ஜெயமணி அதிமுகவில் மாவட்ட மகளிர் அணி யில் நிர்வாகியாக பணியாற்றியவர். 2015 ஆண்டு முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.ஆனந்தன் மீது  பாலியல் புகார் மற்றும் தன்னிடம் ரூ.1 கோடி மோசடி  செய்ததாக மீது புகார் அளித்தார். அடுத்தடுத்த புகாரையடுத்து இவரது அமைச்சர் பதவியை ஜெயலலிதா  பறித்தாக கூறப்படுகிறது.  இதனையடுத்து ஜெயலலிதா மறைவிற்குப்  பிறகு அதிமுகவில் இருந்து பிரிந்து அமமுக - வில் இணைந் தார் ஜெயமணி. இந்நிலையில்  கஞ்சா கடத்தல் வழக்கில் பிடிபட்டு  இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.