திருப்பூர், மார்ச் 11 - உரிமம் புதுப்பிக்கச் செல்லும் பிஎஸ் 2, 3 வகை சரக்கு வாகனங் களில் வேகக் கட்டுப்பாட்டுக் கரு வியை மீண்டும் பொருத்த வேண் டும் என கட்டாயப்படுத்துவதற்கு சிஐடியு மோட்டார் தொழிலாளர் சங்கம் கடும் எதிர்ப்புத் தெரிவித் துள்ளது. திருப்பூர் மாவட்ட மோட் டார் தொழிலாளர் சங்கம் (சிஐ டியு) மாவட்டத் தலைவர் எஸ்.விஸ்வநாதன், மாவட்டச் செயலா ளர் ஒய்.அன்பு, மாவட்டப் பொரு ளாளர் எஸ்.அருண் ஆகியோர் தலைமையில் சரக்கு வாகன ஓட்டு நர்கள், உரிமையாளர்கள் சுமார் 50 பேர் புதன்கிழமை திருப்பூர் வடக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தை முற்றுகையிட்ட னர். அங்கு அவர்கள் வட்டாரப் போக்குவரத்து அலுவலரைச் சந்தித்து வாகன உரிமம் புதுப் பிப்பு பெறுவதில் வேகக் கட்டுப் பாட்டுக் கருவியை மீண்டும் புதி தாக பொருத்த வேண்டும் என கட்டாயப்படுத்துவதற்கு ஆட்சே பம் தெரிவித்தனர்.
இது குறித்து சிஐடியு தொழிற் சங்கத்தினர் கூறுகையில், 2015க்கு முந்தைய பிஎஸ் 2, 3 வகை சரக்கு வாகனங்களில் ஏற் கெனவே இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சுமார் ரூ.5 ஆயிரம் செல விட்டு வேகக் கட்டுப்பாட்டுக் கருவி பொருத்தப்பட்டுள்ளது. அந்த வாகனங்களை தற்போது எப்.சி. தரச்சான்று புதுப்பிப்பதற்கு வட்டாரப் போக்குவரத்து அலு வலகங்களுக்குக் கொண்டு சென்றால், மீண்டும் வேகக் கட்டுப்பாட்டுக் கருவியைப் பொருத்த வேண்டும் என கட்டா யப்படுத்துகின்றனர். இரண் டாண்டுகளுக்கு உள்ளாக மீண் டும் ரூ.5 ஆயிரம் செலவு செய்ய வேண்டுமென்றால் நாங்கள் என்ன செய்வது?
அப்படி இல்லாவிட்டால், ஏற்கெனவே பொருத்திய வேகக் கட்டுப்பாட்டுக் கருவியை ஆன் லைன் மூலம் அப்டேட் (தற்காலப் படுத்துவது) செய்ய வேண்டும் எனச் சொல்கின்றனர். அரசு அங்கீகரித்த 5 பிராண்டட் நிறு வனங்கள் மூலமாகத்தான் முன்பு வேகக் கட்டுப்பாட்டுக் கருவிகள் வாங்கிப் பொருத்தப்பட்டன. அதில் ஜிஆர்எல் எனப்படும் நிறு வனத்தின் வேகக் கட்டுப்பாட் டுக் கருவி மட்டும் தற்போது ஆன்லைனில் அப்டேட் ஆக வில்லை எனக் கூறுகின்றனர். இதற்கு போக்குவரத்து துறையி னர்தான் காரணம். ஆனால் எங் களைப் போன்ற சாதாரண மோட்டார் தொழில் துறையினர் தலையில் சுமை ஏற்றுவது நியாயமாகுமா?
ஆளும் ஆட்சியாளர்கள், வட் டாரப் போக்குவரத்து துறையினர் வேகக் கட்டுப்பாட்டுக் கருவி களை விற்பனை செய்யும் நிறுவ னங்களுடன் முறைகேடாகக் கூட்டு சேர்ந்து கொண்டு இது போல் தொழில் துறையினரை சிரமப்படுத்துவதாக எங்களுக்கு சந்தேகம் உள்ளது. இதைப் பற்றியெல்லாம் வட்டாரப் போக்குவரத்து அலுவ லரிடம் சிஐடியு நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தினோம். வேகக் கட்டுப்பாட்டுக் கருவியை அப்டேட் செய்வதற்கான மாற்று வழிமுறை குறித்து ஆலோசிப்ப தாக வட்டாரப் போக்குவரத்து அலுவலர் தெரிவித்தார். எனினும் எங்களுக்கு இந்த பிரச்சனை யில் தெளிவான தீர்வு கிடைக்க வில்லை. மோட்டார் தொழில் ஏற் கெனவே எரிபொருள் கட்டண உயர்வு, உதிரி பாகங்கள் விலை யேற்றம், தொழில் மந்தம் என பல்வேறு சிரமங்களைச் சந்தித்து வருகிறது. வாகனக் கடன், இன் சூரன்ஸ் சுமையையும் தாங்கிக் கொண்டு நாங்கள் இத்தொழி லைச் செய்து வருகிறோம். இது போதாதென்று வேகக் கட்டுப் பாட்டு கருவி விசயத்திலும் கூடு தல் சுமையை ஏற்படுத்தி இந்த தொழில் துறையினரை வதைப் பதை ஏற்க முடியாது என்று சிஐ டியு நிர்வாகிகள் கூறினர்.