பொள்ளாச்சி, செப்.3 - பொள்ளாச்சியை அடுத்த ஆழியார் குரங்கு அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் செல்ல அனுமதி மறுக்கப் பட்டுள்ளது. கோவை மாவட்டம், வால்பாறை மலைப் பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதன்காரணமாக பொள்ளாச்சியை அடுத்த ஆழியார் குரங்கு அருவி யில் வெள்ளப் பெருக்கு ஏற்பட் பட்டுள்ளது. இதனால் அருவியில் வழக்கத்தை விட நீர் ஆர்ப்பரிப்புடன் கொட்டுகிறது. இதையடுத்து சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு இரண்டாவது நாளாக செவ்வா யன்றும் சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இத னால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.