tamilnadu

img

நிரம்பி வழியும் பில்லூர் அணை கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

மேட்டுப்பாளையம், அக்.18- மேட்டுப்பாளையத்தில் உள்ள பில்லூர் அணை நிரம்பிய தையடுத்து, அணையின் பாது காப்பு கருதி உபரி நீர் வெளியேற் றப்படுவதால் பவானியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள் ளது. இதைத்தொடர்ந்து கரை யோர பகுதி மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகம் மற்றும் கேரள காடுகளை நீர்பிடிப்பு பகுதிகளாக கொண்டுள்ளது கோவை பில் லூர் அணை. அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 100 அடியாகும். பவானியாற்றின் குறுக்கே கட் டப்பட்டுள்ள இந்த பில்லூர் அணை நீரை ஆதாரமாக கொண்டே கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட மக்களின் குடி நீர் தேவைக்காக பதினைந்திற் கும் மேற்பட்ட குடிநீர் திட்டங் கள் செயல்பாட்டில் உள்ளன. இந்நிலையில் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான மேற் குத்தொடர்ச்சி மலைக்காடுகளில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருவ தன் காரணமாக அணைக்கான நீர்வரத்து திடீரென உயரத்துவங் கியது. அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 20 ஆயிரம் கனஅடி யாக அதிகரித்த நிலையில், வெள்ளியன்று அதிகாலை அணையின் நீர்மட்ட உயரம் 97.5  அடியை தொட்டது. அதே நேரத்தில் அணையின் நீர்வரத்து 25 ஆயிரம் கனஅடியாக உயர்ந்தது. இதனால் அணையின் பாதுகாப்பு கருதி அதன் உபரி நீர் வெளியேற்றப்பட்டது. தற்போது, அணையின் நான்கு மதகுகள் வழியே அணையின் நீர்வரத்தான வினாடிக்கு 26 ஆயிரம் கனஅடி நீர் அப்படியே உபரி நீராக பவானியாற்றில் வெளியேற்றப்படுகிறது. இத னால் ஆற்றின் வேகம் அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனையடுத்து மாவட்ட நிர் வாகம் சார்பில் உடனடியாக வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிப்போர் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறி வுறுத்தப்பட்டுள்ளது. மேலும் ஆற்றில் இறங்கி குளிக்கவோ, துவைக்கவோ, பார்சல் ஓட்டவோ கூடாது என கரையோர மக்க ளுக்கு எச்சரிக்கை விடப்பட் டுள்ளது.

;