tamilnadu

img

சாக்கடையில் வீணாக செல்லும் குடிநீர் குழாயை சரி செய்க - வலியுறுத்தல்

இளம்பிள்ளை, மார்ச் 16- இளம்பிள்ளையில், சாக்கடை கால்வா யில் வீணாக செல்லும் குடிநீர் குழாயை உட னடியாக சரி செய்ய வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சேலம் மாவட்டம், இடங்கணசாலை பேரூராட்சி பகுதிக்கு உட்பட்ட 10-ஆவது வார்டு காந்திநகர், வி.ஓ.என் பகுதியில் கடந்த மாதம்  சாலை புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்றது. அப்பொழுது அவ்வழியாக செல்லும் காவிரி குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. அதனை சரிசெய்யாமல் அப்ப டியே சாலை அமைக்கப்பட்டதால், கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக காவிரி குடிநீர் வீணாக கழிவுநீர் கால்வாயில் செல்கிறது.  இதனை சரிசெய்யக் கோரி பலமுறை பேரூராட்சி நிர்வாகத்திடம் புகார் செய்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை என அப்பகுதி பொதுமக்கள் குற் றஞ்சாட்டியுள்ளனர். இதனை, உடனடி யாக சரிசெய்து தண்ணீர் வீணாவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வ லர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.