அவிநாசி, ஆக.19- அவிநாசி அருகே சமுதாய நலக்கூடம் அமைக்க 5 ஆண்டுக ளுக்கு முன்பே அடிக்கல் நாட்டி யும் கட்டுமானப் பணிகள் தொடங்க வில்லை என சபாநாயகரிடம் இந் திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் புகார் மனு அளித்தனர். அவிநாசி பேரூராட்சிக்குட் பட்ட முத்து செட்டிபாளையத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தொகுதியிலிருந்து தேர்வு செய்யப்பட்டு, பேரவைத் தலைவராக செயல்பட்டு வரும் பி.தனபால் வந்திருந்தார். அப் போது, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் கோரிக்கை மனு அளித்தனர். இம்மனுவில் கூறியிருப்பது 30.7.2014 ஆண்டு தமிழகத்தினுடைய சபாநாயகரும், அவிநாசி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான தாங்கள் முத்து செட்டிபாளையத்தில் சமுதாய நலக்கூடம் கட்டுவதற்காக அடிக்கல் நாட்டினீர்கள். 5ஆண்டு கள் கடந்த பின்னரும் கட்டுமானப் பணிகள் தொடங்கவில்லை. எனவே, தங்களால் அடிக்கல் நாட்டப்பட்ட சமுதாய நலக் கூடத்தை விரைந்து அமைக்க நட வடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரியிருந்தனர். மேலும், சுடுகாடு சுற்றுச்சுவர் கட்டி தரவேண்டும், சாக்கடை வசதி, அங்கன்வாடி மைய சுற்றுச்சுவர் கட்டி தரவேண்டும் என்பன உள் ளிட்ட கோரிக்கைகளும் மனுவில் வலியுறுத்தப்பட்டது. அதேபோல கொடிகாத்த கும ரன் நகர் பகுதியில் குடியிருப்போர் நல சங்கம் சார்பில் அடிப்படை வசதிகளான குடிநீர் பிரச்சனை, சாக்கடை வசதி அமைத்து தரக் கோரியும் மனு அளித்தனர்.