tamilnadu

வழிப்பறியில் ஈடுபட்ட விஎச்பி அமைப்பினர் 5 பேர் கைது

கோவை, அக். 31- கோவை இடிகரையில் வடமாநிலத் தொழிலாளர் களை வழிமறித்து செல்போன் உள்ளிட்டவற்றைக் பறித்துச் சென்ற விஎச்பி அமைப்பைச் சேர்ந்த 5 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். கோவை, இடிகரையில் உள்ள தனியார் நிறுவ னத்தில் பணியாற்றி வரும் வடமாநிலத் தொழிலாளர்கள் சிலர் வியாழனன்று இரவு பணிமுடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்துள்ளனர். அப்போது, அப்பகுதியைச் சேர்ந்த விஸ்வ ஹிந்து பரிஷித் அமைப்பைச் சேர்ந்த ஆறு பேர் இவர்களை வழிமறித்துள்ளனர். பின்னர், அவர்களிடமிருந்து செல்போன், பணம் உள்ளிட்ட வற்றை மிரட்டிப் பிடுங்கியதுடன், அவர்களை கடுமை யாக தாக்கியுள்ளனர். இதனைக் கண்ட அப்பகுதிப் பொதுமக்கள் அக்கும்பலை பிடிக்க முயலுகையில் அங்கி ருந்து தப்பியோடியுள்ளனர்.

 இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையி னர் விசாரித்ததில், இதுபோன்று வடமாநிலத் தொழிலாளர்களிடம் விஎச்பி அமைப்பினர் தொடர்ந்து மிரட்டி வழிப்பறி செய்து வந்தது தெரியவந்தது. குறிப் பாக, வடமாநிலத் தொழிலாளர்களில் பெரும்பாலா னோர் காவல்துறையில் புகாரளிக்க தயங்குவதை பயன்ப டுத்தி, அவர்களை குறிவைத்து விஎச்பி அமைப்பினர் வழிப்பறியில் ஈடுபடுவது வாடிக்கையாக இருந்து வரு வது கண்டறியப்பட்டது.  இதையடுத்து தப்பியோடிய விஎச்பி-யினரை காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வந்தனர்.  இந்நிலையில், இந்த வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்ட கோவை இடிகரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிக ளில் வசித்து வந்த விஎச்பி அமைப்பைச் சேர்ந்த ஆனந்த், நாகராஜ், கார்த்தி, மேகராஜ் மற்றும் சீனிவாசன் ஆகிய 5 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள மற்றொரு நபரை காவல்துறை யினர் தேடி வருகின்றனர்.