மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை தெற்கு நகரக்குழு மற்றும் மதுக்கரை ஒன்றியக்குழு இணைந்து நடத்திய தீக்கதிர் சந்தா ஒப்படைப்பு சிறப்பு பேரவை திங்களன்று நடைபெற்றது. இதில் கோவை தெற்கு நகரக்குழு சார்பில் 22 சந்தாக்கள், மதுக்கரை ஒன்றியத்தின் சார்பில் 20 சந்தாக்கள் என மொத்தம் 42 தீக்கதிர் சந்தாக் கள் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜ னிடம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.கருப்பையா, தெற்கு நகரக்குழு செயலாளர் கே.நாகேந்திரன், மதுக்கரை ஒன்றிய செயலாளர் ரவிச் சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.