சேலம், மார்ச் 20- சேலம் மத்திய பேருந்து நிலையம் அருகே நின்று கொண்டிருந்த தனியார் சொகுசுப் பேருந்து தீப்பிடித்து எரிந்து நாச மாகியது. சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள ஸ்வர்ணபுரி பகுதியில் கேபிஎன் பேருந்து நிறுவனம் உள்ளது. இந்த நிறுவ னத்திற்கு சொந்தமான சொகுசு பேருந்து அலுவலகம் அருகே உள்ள சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இந் நிலையில் வெள்ளியன்று பேருந்தின் பின் புறம் திடீரென தீப்பிடித்து எரிந்தது. உடனே அப்பகுதி பொதுமக்கள் தீயணைப்பு துறை யினருக்கு தகவல் தெரிவித்தனர். செவ்வாய் பேட்டை தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்க முயன்றனர். சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத் தனர். இருப்பினும் பேருந்து முழுவதுமாக தீயில் கருகி சேதமடைந்தது. சொகுசு பேருந்து அருகே குப்பை எரிந்து கொண்டு இருந்ததால் அதிலிருந்து தீ பற்றி இருக்கலாம் என்று தீயணைப்பு துறை யினர் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பள்ளப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.