கோவை, பிப்.27- வெள்ளலூர் குப்பை கிடங்கில் வியாழனன்று மீண்டும் ஏற்பட்ட தீ விபத்தால் அப்பகுதிப் பொதுமக்கள் பெரும் அவதியடைந்துள்ளனர். கோவை வெள்ளலூரில் மாநகராட்சிக்கு சொந்தமான குப்பைக்கிடங்கு உள்ளது. 600 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த குப்பைக் கிடங்கில் கோவை மாநகர் முழுவதும் சேகரிக் கப்படும் 1000 டன்னிற்கும் மேற்பட்ட குப்பைகள் இங்கு தினமும் கொட்டப்படுகிறது. மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று தரம் பிரிப்பதற்காக தனித்தனி மையங்கள் இருந்தாலும், இந்த குப்பைக் கிடங்கில் அடிக்கடி தீவிபத்து ஏற்படுகிறது. மேலும், தேக்கி வைக்கப்பட்டுள்ள குப்பைகள் மலை போல் குவித்து வைக்கப்பட்டுள்ளதால் அப்பகுதி யில் சுகாதார சீர்கேடுகள் ஏற்படுவதாகவும், இதனை வேறு இடத்திற்கு மாற்ற அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில், வியாழனன்று மீண்டும் குப்பை கிடங் கில் தீ பற்றியதை தொடர்ந்து அப்பகுதி முழுவதும் புகை மூட் டத்துடன் காணப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைக் கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.